என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷித் கான்"

    • வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • இதன்மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட்லீயின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.

    அபுதாபி:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

    அதன்படி ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    மேலும் டி20 150-க்கு கூடுதலான விக்கெட்டும் ஒருநாளில் 200-க்கு கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய வீரராவார்.

    ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தில் ரஷித்கான் உள்ளார். முன்னாள் நியூசிலாந்து வீரர் சவுத்தி 174 டி20 விக்கெட்டும் 221 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் உள்ளார்.

    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீயின் சாதனையையும் ரஷித் கான் முறியடித்துள்ளார். குறைந்த ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் 4 இடங்களில் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் (101 போட்டிகள்), ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் (102 போட்டிகள்), இந்திய வீரர் முகமது ஷமி (103 போட்டிகள்) நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் (106 போட்டிகள்) ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் (107 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
    • ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

    அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இதற்கு முன்பு டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
    • 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரசீத் கான் படைத்தார்.

    இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3-ம் இடமும் 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4-ம் இடமும் 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5-ம் இடத்திலும் உள்ளனர். 

    • தி ஹண்ட்ரட் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.
    • லண்டன் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார்.

    ஓவல் சார்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது.

    இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இவர் 478 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    அதன்பின், இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம்.
    • நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நடப்பு தொடரில் ரஷித் கான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு விக்கெட் எடுக்க கூட முடியாமல் திணறினார். மேலும் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்நிலையில் இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் பெற்றுக் கொண்டேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம். அவரிடம் நான் பிட்சுகளை மட்டும் நம்பி நாம் விளையாட முடியாது. பிட்சில் சரியான இடத்தில் நாம் பந்தை பிட்ச்செய்து வீச வேண்டும் என்று சொன்னேன்.

    அவர் பந்துவீசும் விதம் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகளை நான் விரும்புகிறேன். அவரிடம் இருந்து அவற்றை கற்றுக் கொள்கிறேன். நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.

    என்னுடைய அனுபவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் நான் பெற்றுக் கொண்டேன்.

    என்று ரஷித் கான் கூறினார்.

    • அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ரஷித் கான் கூறினார்.
    • இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானர். கடந்த 1990-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

    நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார்.

    மறுபுறம் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள்.


    அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரஷித் கான் பந்துகளை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஷித் கான் பேசியது பின்வருமாறு. "அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்" என்று கூறினார்.

    அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. "இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்" என்று கூறினார்.

    • ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் இருந்திருக்கிறார்.
    • ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.

    டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.

    இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.

    2019-ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷித் கான் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார். 

    • மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
    • அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என டுவிட்டர் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அவர் குஜராத் காந்திநகரில் தெருவில் இந்திய ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    முபாடல் வோக்ரா என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள 26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ காட்சியில் ரஷித்கான் பேட்டிங் செய்கிறார். பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்த இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் ரஷித்கானை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், வெறுப்பாளர்கள் இல்லாத, அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

    • நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், உலகக் கோப்பை போட்டியில் வாங்கும் சம்பளத்தை தனது நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • ராஜஸ்தான் அணிக்கெதிராக 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீ்ழ்த்தினார்.
    • 11 பந்தில் 24 ரன்கள் அடித்து அணியை கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தார்.

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். உலகளவில் நடைபெறும் பெரும்பாலான தொழில்முறையான டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒருவேளை அவரது பந்து வீச்சு எடுபடவில்லை என்றால் பீல்டிங் மற்றும் பேட்டிங்கிலும் அணியை வெற்றிபெற வைக்க துடிப்பார். அணியின் வெற்றிக்காக தனது 100 சதவீத பங்களிப்பை கொடுக்க எப்போதும் தவறியதில்லை.

    நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் அப்படித்தான் பேட்டிங்கில் களம் இறங்கி 11 பந்தில் 24 ரன் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இந்த நிலையில் ரஷித் கான் குறித்து கவாஸ்கர் கூறுகையில் "அவர் வழக்கம்போல் விக்கெட் வீழ்த்துவது போல் விக்கெட் வீழ்த்தவிலலை. ஆனால், பேட்டிங்கில் அவரது பங்களிப்பு தேவை என்று வந்தபோது, களத்தில் இறங்கி அதை கச்சிதமாக செய்து முடித்தார்.

    இந்த காரணத்தினால்தான் உலகளவில் உள்ள தொழில்முறை கிரிக்கெட் அணிகள் இவர் போன்ற வீரர்களை விரும்புகிறது. ரஷித் கானை அவர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் அவர்கள் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் அவருடைய உள்ளார்ந்த ஈடுபாட்டை காண முடியும்.

    அவர் பீல்டிங் செய்யும்போது, தன்னால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்துவார். பந்து வீச்சாளர்கள் அவர்கள் பந்து வீசும் கைகளின் தோள்பட்டை கீழே படும்படி டைவிங் அடிக்க யோசிப்பார்கள். ஏனென்றால், ஒருவேளை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டால் அவர்களது பந்து வீச்சுக்கு மிகப்பெரிய வகையில் அச்சுறுத்தலாகிவிடும்.

    ஆனால் அந்த பயம் ரஷித் கானிடம் இருக்காது. அவர் தனது 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்த விரும்புவார்.

    இதேபோல் இன்னொரு வீரர் உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அவர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பீல்டிங், பந்து வீச்சு, பேட்டிங் ஆகிவற்றில் 100 சதவீதம் தனது பங்களிப்பை வெளிப்படுத்துவார். இதேபோன்ற வீரர்களைத்தான் பயிற்சியாளர்கள், கேப்டன்கள் விரும்புவார்கள்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காபூல்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என் ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான அணி விவரம்:

    ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி, பரீட் அகமது மாலிக்.

    ரிசர்வ் வீரர்கள்; செடிக் அடல், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஜாய், சலீம் சபி.

    • தற்போது தன்னுடைய உடல் நிலை நன்றாக இருப்பதை உணர்கிறேன்.
    • மிக விரைவில் முழு உடல் திறனை எட்டுவேன்.

    அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி 11 பந்தில் 26 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார்.

    இந்த போட்டியில் தோனிக்கு எதிராக விளையாடிய அனுபவம் குறித்து ரஷித் கான் கூறியதாவது:- நீங்கள் கில் மற்றும் சுதர்சன் இருவரின் ஆட்டத்தை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அவர்கள் விளையாடிய விதத்தை மிகவும் ரசித்தீர்கள், இருப்பினும் வெற்றிப் பக்கத்தில் இருப்பதில் மகிழ்ச்சி.

    இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. தற்போது தன்னுடைய உடல் நிலை நன்றாக இருப்பதை உணர்கிறேன். தனது முதுகு வலி சரியாகி, தற்போது சிறப்பாக களமிறங்கி உள்ளேன். மிக விரைவில் முழு உடல் திறனை எட்டுவேன்.

    நான் தோனிக்கு எதிராக பந்துவீசியுள்ளேன். அவர் விளையாட வரும்போது அது வித்தியாசமான உணர்வாக இருந்தது. அவருடன் விளையாடுவது எங்களுக்கு நல்ல ஆற்றலை கொடுத்தது. அவருடன் விளையாடியதை பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

    முன்னதாக, ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு 1 ரன்னில் ரச்சின் அவுட் ஆனார். உடனே ரகானேவும் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.

    டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த துபே 21, ஜடேஜா 18, சாண்டனர் 0 என வெளியேறினர்.

    இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×