என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவாஸ்கர்"

    • பாகிஸ்தான் வாரியம் 2 முறை விடுத்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்தது.
    • போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 14-ந் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    இந்த விவகாரம் சா்ச்சையானதால் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண் டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக் கெட் கவுன்சில்) முறையிட்டது. தங்களது இந்த கோரிக்கையை ஏற்கா விட்டால் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவோம் என்றும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது.

    பைகிராப்ட்டை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் 2 முறை விடுத்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்தது. இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பைகிராப்ட் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனால் போட்டியில் இருந்து விலகும் முடிவை பாகிஸ்தான் கைவிட்டது. இந்த பிரச்சினையால் பாகிஸ்தான்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் கடந்த 17-ந் தேதி மோதிய ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான ஊடக சந்திப்பை பாகிஸ்தான் அணி ரத்து செய்தது.

    இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுமாதிரி செயல்படுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஊடக சந்திப்பில் இருந்து விலகியது.

    இந்த நிலையில் நிருபர்கள் சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தானுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்ர கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக பாகிஸ்தானுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணி எந்த யோசனையில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர் சந்திப்பு கட்டாயமாகும். ஏதேனும் இருந்தால் அதை ஊடகங்களில் தெரிவிப்பது அவசியமாகும்.

    பாகிஸ்தான் தங்களிடம் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்று நினைக்கலாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்விதான் ஆசிய அமைப்பின் தலைவராக செயல்படுகிறார்.

    ஊடக சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்கலாம் அல்லது போட்டி முடிவுகளின் பட்டியலில் ஒரு புள்ளியை குறைக்கலாம்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • பரபரப்பான கடைசி டெஸ்டில், 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
    • இந்தியா வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் அபாரமான பந்து வீசினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக விளையாடினார். ஓய்வு அளிக்கப்படாமல் 5 போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட்டார். 5 போட்டிகளில் தொய்வின்றி பந்து வீசினார். கடைசி போட்டியின் 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    பணிச்சுமை காரணமாக பும்ரா இடம் பெறாத நிலையில், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கடைசி டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    முகமது சிராஜ் ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து பந்து வீசியதை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கவாஸ்கர் முகமது சிராஜ் குறித்து கூறியதாவது:-

    இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது கவுரவம். நீங்கள் 140 கோடி மக்களை பிரதிநிதித்துவம் படுத்துகிறீர்கள். அதைத்தான் நாங்கள் முகமது சிராஜில் பார்த்தோம். சிராஜ் தனது எனர்ஜியை முழுமையாக வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அவர் பணிச்சுமையின் என்பதை நீக்கிவிட்டார். பணிச்சுமை என்ற வார்த்தை இந்திய கிரிக்கெட் அகராதியிலிருந்து நீக்கப்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

    ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே இன்னிங்சில் 732 ரன்கள் குவித்திருந்தார்.
    • சுப்மன் கில் இதுவரை இங்கிலாந்தில் தொடரில் 737 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5ஆவது போட்டி இன்று தொடங்கியது. முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணி கேப்டனான சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி போட்டிக்கு முன்னதாக 8 இன்னிங்சில் 4 சதங்களுடன் (இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்) 722 ரன்கள் குவித்திருந்தார்.

    இன்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை 15 ரன்கள் எடுத்துள்ளார். 11 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

    கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். தற்போது வரை 737 ரன்கள் அடித்துள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப்பண்ட் 2 இன்னிங்சிலும் (134 ரன், 118 ரன்) சதம் அடித்தார்.
    • மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார். இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 7-வது இந்திய வீரர் ரிஷப்பண்ட் ஆவார்.

    இந்த நிலையில் ரிஷப்பண்ட் ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அவர் சூப்பர், சூப்பர், சூப்பர் என்று 3 முறை கூறி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, 'ரிஷப்பண்டின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. இளம் வீரரான அவரது ஆட்டம் முற்றிலும் அருமையாக இருந்தது' என்றார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பயணத்தில் மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் முட்டாள், முட்டாள், முட்டாள் என்று 3 முறை கூறி கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது அவரை கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ரிஷப்பண்ட் கூறும்போது, 'பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிகளாக மாற்றும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது. இது கடினமான செயல்முறையாகும். எனது பலவீனங்களை கடந்தது அதிர்ஷ்டமே. கடின உழைப்பு, கவனம், ஒழுக்கம் ஆகியவை இதில் சம்மந்தப்பட்டுள்ளன' என்றார்.

    • இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும்.
    • ஹர்திக்கை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா? அல்லது ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழஙகப்படுமா? என்ற விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவரையும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும். 2 சுழற்பந்து வீரர்கள் விளையாட வேண்டுமா? அல்லது ஒரு சுழற்பந்து வீரருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

    ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இணைந்து விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். இப்படி நடந்தால் சூர்யகுமார் யாதவ் 4-வது வரிசையிலும், ரிஷப் பண்ட் 5-வது வரிசையிலும் ஹர்திக் பாண்ட்யா 6-வது வரிசையிலும், தினேஷ் கார்த்திக் 7-வது வரிசையிலும் விளையாடலாம். பேட்டிங் வரிசையும் வலுவாக இருக்கும்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். இதனால் அவரை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • சர்பராஸ்கான் களத்தில் சதங்கள் அடித்துள்ளார்.
    • ஸ்லிம் வீரர்களை மட்டும் தேடுகிறீர்கள் என்றால் பேஷன் ஷோவுக்கு சென்று சில மாடல்களை தேர்ந்தெடுங்கள்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யாதது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சர்பராஸ்கான் களத்தில் சதங்கள் அடித்துள்ளார். இது அவர் கிரிக்கெட்டுக்கு தகுதியானவர் என்று உங்களுக்கு சொல்கிறது. நீங்கள் (தேர்வுக்குழு) ஸ்லிம் வீரர்களை மட்டும் தேடுகிறீர்கள் என்றால் பேஷன் ஷோவுக்கு சென்று சில மாடல்களை தேர்ந்தெடுத்து பிறகு அவர்கள் கையில் ஒரு பேட் மற்றும் பந்தை கொடுத்து அவர்களை சேர்த்து கொள்ளுங்கள்.

    உங்களிடம் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வீரர்கள் இருக்கிறார்கள். அளவை பார்க்க வேண்டாம். ரன் மற்றும் விக்கெட் எடுப்பதை பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார்.
    • ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருபவர்களில் ஒருவர் ஜெய்ஷ்வால்.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார். ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது. ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ளார். ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ஜெய்ஷ்வால் 2-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் அவரது ரன் குவிப்பு மேலும் அதிகமாகும்.

    இந்நிலையில் ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த சீசனில் ஜெய்ஷ்வால் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொழில்நுட்ப ரீதியான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் 20 முதல் 25 பந்தில் 40 முதல் 50 ரன்கள் எடுக்கிறார். 15 ஓவர்கள் விளையாடினால் சதம் அடிக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது அணிகள் ஸ்கோர் 190 முதல் 200 ரன்கள் வரை குவிக்க இயலும்.

    ஜெய்ஷ்வால் 20 ஓவர் போட்டிக்கு தயாராக இருக்கிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போது வாய்ப்பு வழங்கினால் தான் அவருக்கு நம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ரோகித் சர்மாவிடம் இருந்து நான் அதிகம் எதிர்பார்த்தேன்
    • ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும்...

    விராட் கோலிக்கு பிறகு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெற்றுக் கொடுத்த அவரால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் சாதிக்க இயலவில்லை.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை. அரைஇறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இதேபோல் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தோல்வியை தழுவியது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. 2 டெஸ்ட் கொண்ட தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கோப்பையை 5 முறை கைப்பற்றிய ரோகித் சர்மா. இந்திய அணியில் தனது பெயரை நிலை நிறுத்தவில்லை. அவரிடம் இருந்து நான் அதிகம் எதிர்பார்த்தேன். இந்தியாவில் விளையாடுவதும், வெளிநாட்டில் ஆடுவதும் மாறுபட்டதாகும்.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீரர்கள் தேர்வு, அணியை நடத்திய விதமும் ஏமாற்றத்தை கொடுத்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி.
    • உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.

    இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணி தொடர்பாக பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிபுணர்களின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, அவர்கள் (வெளிநாட்டு நிபுணர்கள்) தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளை பார்த்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. இந்திய அணியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வீரர்களையா தேர்வு செய்கிறோம்? இது எப்படி அவர்களது கவலையாக இருக்கும். இந்திய வீரர்கள் யாராவது ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்கிறார்களா? அது எங்களது வேலை இல்லை.

    கோலி, ரோகித் சர்மாவை விட பாபர் ஆசம் சிறந்தவர் என்று கூறுவார்கள். ஷாகின் ஷா அப்ரிடி சிறந்தவர், தெண்டுல்கரைவிட இன்சமாம்-உல்-ஹக் சிறந்தவர் என்று கூறினார்கள். அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி.

    யார் 3-வது மற்றும் 4-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன்.
    • இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் 24 வயதான சுப்மன் கில் கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 1,584 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார்.

    எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை. அவர் 2 மற்றும் 26 ரன்னில் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தார். வெள்ளை நிற பந்தில் ஜொலிக்கும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை 19 டெஸ்டில் ஆடி 2 அரைசதம் உள்பட 994 ரன் எடுத்துள்ளார். கடைசி 7 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    இந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (இந்தியா) டெஸ்டில் எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவதை காட்டிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சிறிது வித்தியாசம் உள்ளது. ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி போன்றே டெஸ்டிலும் அதிரடியாக ஆட நினைக்கிறார்.

    குறுகிய வடிவிலான போட்டிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைநிற பந்தை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய சிவப்பு நிற பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் வேகமாக நகரும். மேலும் சிவப்பு பந்து அதிகமாக பவுன்சும் ஆகும். அதை மனதில் வைத்து அவர் டெஸ்டிஸ் விளையாட வேண்டும்.

    சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய போது, அவரது ஷாட்டுகள் எல்லாம் பாராட்டும்படி இருந்தது. மீண்டும் அவர் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், 'சுப்மன் கில் 2023-ம் ஆண்டில் முதல் 9-10 மாதங்களில் நன்றாக ஆடினார். அதன் பிறகு தான் தடுமாறுகிறார். மறுமுனையில் ஆடும் ரோகித் சர்மா போன்ற வீரர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை உடல்நலம் பாதிப்பின் (டெங்கு காய்ச்சல்) காரணமாக இந்த தடுமாற்றம் வந்திருக்கலாம். சுப்மன் கில்லிடம் சூப்பர் திறமை இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருப்பார். 2024-ம் ஆண்டு அவருக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.

    • தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோல்வியடைந்தது.
    • கேப்டவுன் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ராகுல் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

    2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதற்கு கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில் இந்திய அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பு முதல்தர பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

    வெளிநாட்டு பயணங்களில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி திட்டமிடல் செய்வது அவசியமாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி மிகவும் மோசமானது. பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் நேரடியாக டெஸ்டில் விளையாடியதால் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தயார்ப்படுத்திக் கொள்ள முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.
    • ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 சதமும் அடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவர் 2-வது சதம் அடித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 131 ரன் எடுத்து இருந்தார்.

    59-வது டெஸ்டில் விளையாடி வரும் ரோகித் சர்மா நேற்று தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டு மொத்த சர்வதேச போட்டிகளில் 48-வது செஞ்சூரியை அடித்தார். இதன் மூலம் அவர் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை சமன் செய்தார்.

    36 வயதான ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 என ஆக மொத்தம் 48 சதங்களை பதிவு செய்துள்ளார்.

    ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.

    இருவரும் தற்போது 10-வது இடங்களில் உள்ளனர். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்திலும், விராட் கோலி 80 செஞ்சூரியுடன் 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 71 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4-வது சதத்தை (14 போட்டி) ரோகித் சர்மா எடுத்தார். இதன் மூலம் அவர் கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார். கவாஸ்கர் 38 டெஸ்டில் 4 சதம் எடுத்து இருந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிராக ராகுல் டிராவிட், தெண்டுல்கர் தலா 7 செஞ்சூரியும், அசாருதீன் 6 சதமும், வெங்சர்க்கார், விராட் கோலி தலா 5 செஞ்சூரியும் அடித்துள்ளனர்.

    ×