search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரையும் அணியில் சேர்க்கலாம்- கவாஸ்கர்
    X

    ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரையும் அணியில் சேர்க்கலாம்- கவாஸ்கர்

    • இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும்.
    • ஹர்திக்கை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா? அல்லது ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழஙகப்படுமா? என்ற விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவரையும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும். 2 சுழற்பந்து வீரர்கள் விளையாட வேண்டுமா? அல்லது ஒரு சுழற்பந்து வீரருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

    ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இணைந்து விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். இப்படி நடந்தால் சூர்யகுமார் யாதவ் 4-வது வரிசையிலும், ரிஷப் பண்ட் 5-வது வரிசையிலும் ஹர்திக் பாண்ட்யா 6-வது வரிசையிலும், தினேஷ் கார்த்திக் 7-வது வரிசையிலும் விளையாடலாம். பேட்டிங் வரிசையும் வலுவாக இருக்கும்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். இதனால் அவரை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    Next Story
    ×