search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பு... கவாஸ்கர் கூறும் அறிவுரை
    X

    வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பு... கவாஸ்கர் கூறும் அறிவுரை

    • தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோல்வியடைந்தது.
    • கேப்டவுன் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ராகுல் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

    2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதற்கு கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில் இந்திய அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பு முதல்தர பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

    வெளிநாட்டு பயணங்களில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி திட்டமிடல் செய்வது அவசியமாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி மிகவும் மோசமானது. பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் நேரடியாக டெஸ்டில் விளையாடியதால் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தயார்ப்படுத்திக் கொள்ள முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    Next Story
    ×