search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது - டி.ஆர்.பாலு
    X

    'பாரத்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது - டி.ஆர்.பாலு

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை.
    • பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு? செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மசோதா வருகிற 18-ந்தேதி கூட உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை என்றார்.

    மேலும், பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. அதே நேரம் இந்தியா என்ற பெயரை உச்சரிக்க பா.ஜ.க. பயப்படுகிறது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    Next Story
    ×