search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textbook"

    • கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது.
    • மாணவர்கள் சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்கொ ரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது. இந்த பாட பகுதிகளை நீக்கியது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் நீக்கப்பட்ட பாடப் பகுதிகளை மீண்டும் சேர்ப்பது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்சபை தேர்தலின் போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. அரசாங்கத்தின் போது பாட புத்தகங்களில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது.

    தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவை அமைத்தது. இக்குழு கர்நாடக அரசின் 6 முதல் 10 ம் வகுப்புகளுக்கான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரையை வெளியிட்டுள்ளது.

    இந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, 10-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சமூக சீர்த்திருத்தங்கள் பாடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

    பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மாணவர்களை சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள் என கர்நாடகா கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
    • அரையாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை நுங்கப்பாக்கத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது;-

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ந்தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    தென் மாவட்டங்களில் மழை பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது பற்றி முதல்- அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

    • 2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது.
    • தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாடப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி, பென்சில், ஜாமின்ரி பாக்ஸ், கிரையன்ஸ், சீருடை, பள்ளி பை, ஷீ உள்ளிட்ட பொருட்களும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்கள் கையில் பாட புத்தகம் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடபுத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

    2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமை அடைந்தன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அவை குடோன்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஒரு சில நாட்களுக்குள் இந்த பணி நிறைவடைந்துவிடும்.

    பள்ளி ஜூன் முதல் வாரத்தில் திறக்கும்போது அன்றைய தினமே பாட புத்தகங்கள் வழங்க கல்வித் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    • சிவகாசியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.



    அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. 

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அச்சகத் தொழிலில் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இங்கு தான் அச்சிடப்படுகிறது. சிவகாசியில் செயல்பட்டு வரும் அச்சகங்களில் லட்சக்கணக்கான பணியா ளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்த கங்கள் சிவகாசி அச்சகங்க ளில் தயாராவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தக மாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டிற்கு தேவை யான பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு, அச்சகங்களுக்கு டெண்டர் மூலம் அச்சிடும் பணிகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாட புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்தபணிகள் தமிழகத்திற்கு 85 சதவீதம் வழங்கப்பட்டாலும் 15 சதவீத பணிகளை ஆந்திர மாநிலதிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 100 சதவீத பணிகளையும் தமிழகத்திற்கே வழங்கி தமிழக அச்சக தொழிலில் ஈடுபடுவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் உள்ள 1, 2, 3-ம்‌ வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    பூம்புகார் தொகுதி, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.இந்நிலையில் கோடை விடுமுறை நாட்கள் முடிவடைந்தது.

    பள்ளியில் உள்ள 1, 2, 3ம்‌ வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.விடுமுறை முடிந்த நிலையில் நேற்று புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர் மங்கை, ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்துகொண்டு புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார். தொட ர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வ ராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவன், டேவிட் பிரேம்குமார், தி.மு.க மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் அமுர்தவிஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் தவறை திருத்தாமல் நாடார்களை இழிவுப்படுத்தும் வாசகங்கள் நீடிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #cbse

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் 9-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடநூலின் 8-வது பாடமாக ‘ஆடைகள்: ஒரு சமூக வரலாறு’ இடம் பெற்றுள்ளது. அதில், 168-வது பக்கத்தில் ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள்; நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகு காலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.

    நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அந்த பாடத்தை சி.பி.எஸ்.இ நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன் 25.10.2012 அன்று அறிக்கை விடுத்தேன். அதுமட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    அவ்வழக்கில் 16.11.2016 அன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கும்படி ஆணையிட்டது. அதன்படி அந்த பாடம் நீக்கப்படும் என்று 19.12.2016 அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    ஆனால், அந்தப் பாடமோ அல்லது அந்தப் பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளோ நீக்கப்படவில்லை. மாறாக சில வார்த்தைகள் மட்டும் திருத்தப்பட்டுள்ளன. அந்தப் பாடத்தில் ஏற்கனவே இருந்த நாடார்கள் பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்தவர்கள், அவர்கள் கள் இறக்கும் சமுதாயத்தினர் என்ற இரு பகுதிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

    அதேநேரத்தில் மலையாள நாயர்கள் கன்னியாகுமரி பகுதியின் பூர்வகுடிகள் அல்ல.... அவர்கள் பிழைப்பு தேடித்தான் குமரி மாவட்டத்தில் குடியேறினர் என்ற உண்மை பதிவு செய்யப்படவில்லை. இப்போதும் அந்தப் பாடத்தைப் படித்தால் மலையாள நாயர்களுக்கு நாடார்கள் அடிமைகளாக இருந்தது போன்ற தோற்றம் ஏற்படும் வகையில் வார்த்தைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    மலையாள நாயர்கள் உயர் சாதியினர் என பழைய பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த பாடத்தில் நாடார்கள் கீழ் சாதியினர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவை அனைத்தும் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வி‌ஷமச் செயல்களாகும்.

    அதேபோல், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக அவர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதனால் அவர்களுக்கு ஆடை அணியும் உரிமை கிடைத்ததாகவும் பாடத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அடக்குமுறைக்கு எதிராக அய்யா வைகுந்தர் 1936ஆம் ஆண்டிலிருந்து தாம் மறையும் வரை போராட்டம் நடத்தியதன் பயனாகவே நாடார் சமுதாயப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை வழங்கப்பட்டது என்பதால், உண்மையான வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

    ஆனால், ஆடை சீர்திருத்தத்தில் அய்யா வைகுந்தர் போன்ற இந்து சீர்திருத்தவாதிகளும் பங்கேற்றனர் என்ற அரை வரியை மட்டும் புதிதாக சேர்த்துள்ள பாடநூல் ஆசிரியர்கள், வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது சகோதரர்களாக வாழும் இந்து, கிறித்தவ நாடார் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இதுவும் உள்நோக்கம் கொண்ட வி‌ஷமத்தனம் ஆகும்.

    இதை ஏற்க முடியாது. ஏற்கனவே உறுதியளித்தவாறு நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற பிரிவு முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #cbse

    ×