search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "printing"

    • சிவகாசியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.



    அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. 

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அச்சகத் தொழிலில் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இங்கு தான் அச்சிடப்படுகிறது. சிவகாசியில் செயல்பட்டு வரும் அச்சகங்களில் லட்சக்கணக்கான பணியா ளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்த கங்கள் சிவகாசி அச்சகங்க ளில் தயாராவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தக மாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டிற்கு தேவை யான பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு, அச்சகங்களுக்கு டெண்டர் மூலம் அச்சிடும் பணிகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாட புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்தபணிகள் தமிழகத்திற்கு 85 சதவீதம் வழங்கப்பட்டாலும் 15 சதவீத பணிகளை ஆந்திர மாநிலதிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 100 சதவீத பணிகளையும் தமிழகத்திற்கே வழங்கி தமிழக அச்சக தொழிலில் ஈடுபடுவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்களை அவற்றில் இடம் பெறும் பிரின்டிங், மதிப்பு கூட்டுகிறது. இத்தகைய பிரின்டிங் துறையை வளர்ச்சி பெறச்செய்வதற்காக 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது தொழில் பாதுகாப்புக்குழு.

    பழவஞ்சிபாளையத்தில் ரூ. 16.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் கிளாஸ் பிரின்ட், கியூரிங் எந்திரங்கள் வந்திறங்கின.இரண்டாம் கட்டமாக துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ரவுண்ட் கரோசல் பிரின்டிங் எந்திரங்கள் திருப்பூருக்கு வந்து சேர்ந்தன.

    பர்ன் அவுட், ஹீட் டிரான்ஸ்பர், 3டி பிரின்ட், ஷிம்மர், ரேடியம் பிரன்ட், எம்போசிங், லெதர் கோட்டிங், டை அண்டு டை, பிளாட்ச் உட்பட 27 வகை பிரின்டிங் செய்யமுடியும். பிரின்டிங் நிறுவனங்களின் திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதற்காக பொது பயன்பாட்டு மையத்தில் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தற்போது வந்துள்ள ரவுண்ட் கிரோசல் எந்திரம் தொழிலாளர்களுக்கு பிரின்டிங் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக தொழில் பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.விரைவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த எந்திரம் சோதனை ஓட்டத்தை துவக்க உள்ளது.

    கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். #Maharashtra #FakeNote
    சத்தாரா:

    மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் கேத்தேஷ்வரா கோவில் அருகே நேற்று முன்தினம் 2 பேர் ரூ.2000 மற்றும் ரூ.500 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சித்தனர். இதனைக் கண்டறிந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் வைத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்களது கூட்டாளிகள் உதவியுடன் சத்தாராவின் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வந்ததாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் கூறிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.29 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாக போலீசார் கைப்பற்றினர். இது தவிர ரூ.29 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளையும் கைப்பற்றினர். இவை அனைத்தும் ரூ.2000 மற்றும் ரூ. 500 கள்ள நோட்டுகள் ஆகும்.

    சோதனையின் போது கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலுக்கு பயங்கரவாத அமைப்புகள் ஏதேனுடன் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    சமீபத்தில் தமிழ்நாட்டில் கோவையில் அச்சடிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கும் அதிகமான ரூ.2000 கள்ள நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின.

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறையில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இவை நவீன தொழில் நுட்பத்தில் இருப்பதால், இதைபோன்று கள்ள நோட்டுகளை அச்சடிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தொடர்ச்சியாக கள்ள ரூபாய் நோட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருவது பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.  #Maharashtra #FakeNote
    கோவையில் பல கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கும் அதிகமான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து காவல்துறை ஒருவரை கைது செய்தது. #FakeCurrency
    கோவை:

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தபோது, புதியதாக ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது.

    அந்த 2,000 ரூபாய் நோட்டு மாறுபட்ட கலர் மற்றும் வடிவமைப்புடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த நோட்டு போன்று கள்ள நோட்டு தயாரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் 2,000 ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்தும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்து இந்தியாவுக்குள் வினியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கோவை உள்பட தமிழகம் முழுவதும் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்தவர் பிடிபட்டார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 31). இவர் மீது கோவை நகர போலீசில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு குற்ற வழக்குகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக கோவை நகரில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. எனவே மோட்டார் சைக்கிளை திருடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். மோட்டார் சைக்கிளை திருடும் பழைய குற்றவாளிகளையும் தேடிவந்தனர்.

    கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மோட்டார் சைக்கிள்களை திருடுபவர் என்பதால் அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆனந்த் மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    ஆனந்தின் சட்டை பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பிரித்து பார்த்தனர். அந்த ரூபாய் நோட்டுகள் கம்ப்யூட்டரில் போட்டோ காப்பி செய்து கலர் ஜெராக்ஸ் மெஷின் மூலம் பிரதி எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அசல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், ஆனந்த் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது ஆனந்த் வைத்திருந்தது கள்ள நோட்டுகள்தான் என்பது உறுதியானது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த கள்ள நோட்டுகளை கொடுத்தது யார்? என்று அவரிடம் கேட்டனர்.

    முதலில் ஆனந்த் உண்மையை கூற மறுத்தார். பின்னர் தீவிர விசாரணையில் அவர் உண்மையை கக்கினார். பணத்துக்கு ஆசைப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை நண்பர்களுடன் சேர்ந்து அச்சடித்து வருவதாக கூறினார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர்கள் சோமசேகர், சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், செந்தில் குமார் ஆகியோர் ஆனந்திடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். கள்ள ரூபாய் நோட்டுகளை எங்கு வைத்து அச்சடிக்கிறீர்கள்? என்று அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியில் ஒரு கடையில் அறை அமைத்து மாதம் ரூ.2,700 வாடகை செலுத்தி நண்பர்களுடன் சேர்ந்து அச்சடிப்பதாக கூறினார்.

    உடனே போலீசார் வேலாண்டிபாளையத்துக்கு விரைந்தனர். ஆனந்த் குறிப்பிட்ட கடையில் அறைபோல் அமைக்கப்பட்டு இருந்ததை திறந்து சென்று பார்த்தனர். அங்கு கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன.

    அந்த அறை முழுக்க போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு, 52 பண்டல்களில் ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன.

    கட்டுக்கட்டாக இருந்த அந்த கள்ள நோட்டுகளை பார்த்ததும் போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் அச்சு அசல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் போலவே இருந்தன. ஒரே சீரியலில் 50 நோட்டுகள் வீதம் அச்சடித்து இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 5,904 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ள நோட்டு தயாரிக்க கம்ப்யூட்டர் மற்றும் ஒரு கலர் ஜெராக்ஸ் மெஷினை பயன்படுத்தி உள்ளனர். கலர் ஜெராக்ஸ் மெஷினில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கலர் போலவே உள்ள மையை பயன்படுத்தி உள்ளனர்.

    மிக நூதனமான முறையில் அவர்கள் இந்த கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மெஷின், பிரிண்டர் கருவி, கள்ள நோட்டுகளை கத்தரிக்கும் கருவி, ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், வெள்ளை காகித கட்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ள நோட்டு அச்சடிப்பதில் காரமடையை சேர்ந்த சுந்தர், யூசுப் ஆகியோர் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். ஆனந்த் பிடிபட்ட தகவல் அறிந்ததும் அவர்கள் இருவரும் அறையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    வேலாண்டிபாளையத்தில் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய கடையை 1½ மாதத்துக்கு முன்பு தான் சுந்தர் வாடகைக்கு எடுத்து, ஆனந்த், யூசுப் ஆகியோர் மூலம் இரவு, பகலாக கள்ள நோட்டுகளை தயார் செய்து வந்து உள்ளார்.

    கள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கோவையிலும், அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரியிலும் புழக்கத்தில் விட்டதாக தெரிகிறது. அசல் ரூபாய் நோட்டுகளுடன் கலந்தும், பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளில் தனித்தனியாக கொடுத்தும் இவற்றை புழக்கத்தில் விட முயன்றுள்ளனர். எந்த அளவுக்கு புழக்கத்தில் விட்டனர் என்பது சுந்தர் கைதான பின்னர்தான் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் அதிகம் பேர் இருப்பதால் அவர்கள் மூலம் புழக்கத்தில் விட்டுள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கும்பலைச் சேர்ந்த யூசுப், சுந்தர் ஆகியோருக்கு பல இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட அனுபவம் உள்ளதால் அவர்கள் அந்த நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டு உள்ளனர். சென்னை, ஈரோடு, திருப்பூர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கு அறை எடுத்து தங்கி இருந்து, இரவு நேரத்தில் வெளியே சென்று கள்ள நோட்டுகளை கடையில் கொடுத்து மாற்றி உள்ளனர்.

    பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்து அதை மாற்ற முடியாமல் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக கூறுவார்கள். உதாரணமாக ரூ.1 கோடிக்கு பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக ரூ.25 லட்சத்துக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக கூறுவார்கள். அப்படி கூறியும் கள்ள நோட்டுகளை மாற்றி இருக்கிறார்கள்.

    அப்படி பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கியவர்கள், அவை கள்ளநோட்டுகள் என்று தெரிந்தாலும் புகார் எதுவும் கொடுக்க முடியாது என்பதால், இந்த கும்பல் சுதந்திரமாக செயல்பட்டு உள்ளது.

    தலைமறைவாக இருக்கும் யூசுப், சுந்தர் ஆகியோரை பிடித்தால் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பல கோடி மதிப்புக்கு ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அந்த கள்ள நோட்டுகள் கோவை மற்றும் அண்டை மாவட்டங்கள், கேரளா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டதா? என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறும்போது, “கள்ளநோட்டு கும்பலில் சுந்தர் என்பவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளதால் அவரையும், கூட்டாளி யூசுப் என்பவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலர் ஜெராக்ஸ் மூலம் இந்த நோட்டுகளை தயாரித்துள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்?, வெளி மாநில தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

    கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்த தனிப்படையை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

    கோவையில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×