search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modern Machinery"

    • நாடு முழுவதும் ரெயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
    • ரெயில்கள் செல்லும் போது தண்டவாளம் உள்ளிழுத்து அசைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

    திருப்பூர் :

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல்திருப்பூர் - ஊத்துக்குளி ரெயில் வழித்தடத்தில், தண்டவாளங்களை தாங்கி பிடிக்கும், கான்கிரீட் சிலாப்புகளின் கீழ் ஜல்லிக்கற்கள் நிரப்பும் பணி நேற்று துவங்கியது.அதிநவீன பிளஸ்சர் எந்திரம் தண்டவாளங்களை அலாக்காக தூக்கி சிலாப் கற்களை தாங்கி பிடிக்க, எந்திரங்கள் சிலாப் கற்களுக்கு கீழ் ஜல்லிகளை நிரப்பின. ரெயில் தண்டவாளத்தில் சிலாப் கற்களின் கீழ் நிரப்பப்படும் ஜல்லிக்கற்கள் தொடர்ந்து இயங்கும் ரெயில்கள் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாட்களில் உடைந்து பொடியாகி விடும்.

    ரெயில்கள் செல்லும் போது தண்டவாளம் உள்ளிழுத்து அசைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பை உறுதி செய்ய புதியதாக பெரிய ஜல்லிகற்கள் சிலாப் கற்களுக்கு கீழ் நிரப்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் ரோடுகளில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஸ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ,தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன் "ரோடு ஸ்வீப்பிங்" எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என கூறினர்.

    • 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சாலைகளில் உள்ள குப்பை, கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஷ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறு சுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன், ரோடு ஸ்வீப்பிங் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என்றனர் .

    • 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்களை அவற்றில் இடம் பெறும் பிரின்டிங், மதிப்பு கூட்டுகிறது. இத்தகைய பிரின்டிங் துறையை வளர்ச்சி பெறச்செய்வதற்காக 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது தொழில் பாதுகாப்புக்குழு.

    பழவஞ்சிபாளையத்தில் ரூ. 16.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் கிளாஸ் பிரின்ட், கியூரிங் எந்திரங்கள் வந்திறங்கின.இரண்டாம் கட்டமாக துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ரவுண்ட் கரோசல் பிரின்டிங் எந்திரங்கள் திருப்பூருக்கு வந்து சேர்ந்தன.

    பர்ன் அவுட், ஹீட் டிரான்ஸ்பர், 3டி பிரின்ட், ஷிம்மர், ரேடியம் பிரன்ட், எம்போசிங், லெதர் கோட்டிங், டை அண்டு டை, பிளாட்ச் உட்பட 27 வகை பிரின்டிங் செய்யமுடியும். பிரின்டிங் நிறுவனங்களின் திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதற்காக பொது பயன்பாட்டு மையத்தில் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தற்போது வந்துள்ள ரவுண்ட் கிரோசல் எந்திரம் தொழிலாளர்களுக்கு பிரின்டிங் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக தொழில் பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.விரைவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த எந்திரம் சோதனை ஓட்டத்தை துவக்க உள்ளது.

    • பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • துணியில் டிசைன்களை மிக துல்லியமாக எந்திரம் பொறிக்கும்.

    திருப்பூர் : 

    பொது பயன்பாட்டு சேவை மையங்களை அமைத்து, பின்னலாடை உற்பத்தி துறையில் உள்ள தொழில் நுட்ப இடைவெளிகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் திருப்பூர் தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. அதிநவீன எந்திரங்களுடன் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதேபோல் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை உற்பத்தி துறையினர் 50 பேரை இணைத்து தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.

    ரூ.16.25 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 8.56 கோடி, மாநில அரசு ரூ. 3 கோடி மானியம் வழங்குகின்றன. தொழில் துறை குழுவினர் ரூ. 4.69 கோடி முதலீடு செய்கின்றனர்.பொது பயன்பாட்டு மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட மெஷினரிகள் வந்திறங்கின.

    மைய தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.சீனாவில் இருந்து ஆட்டோமேட்டிக் டிரையருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளாஸ் பிரின்டிங் எந்திரம், 2 காஸ் கியூரிங் எந்திரம் 2 என இரண்டு வகையான நான்கு எந்திரங்கள் வந்துள்ளன.கிளாஸ் பிரின்டிங் எந்திரத்தில் 76க்கு 36 இன்ச் என்கிற பெரிய பரப்பளவில் துணியில் பிரின்டிங் செய்ய முடியும்.

    பிறப்பிக்கும் கட்டளையை ஏற்று தானாக இயங்கி, துணியில் டிசைன்களை மிக துல்லியமாக இந்த எந்திரம் பொறிக்கும். பிரின்டிங் செய்யப்பட்ட துணியே உடன் இணைக்கப்பட்டுள்ள டிரையருக்கு அனுப்பி உலர்த்தியும் கொடுத்துவிடும். அதிவேக உற்பத்தி திறன் மிக்கது. புதுமையான பிரின்டிங் சேம்பிள் தயாரிப்புக்கு இந்த எந்திரம் கைகொடுக்கும். எந்திரங்களை நிறுவும் பணிகள் நடந்துவருகின்றன. ரவுண்ட் பிரின்டிங் எந்திரம், எம்ப்ராய்டரி எந்திரங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. முதல்கட்ட எந்திரங்கள் வந்துவிட்டதால் விரைவில் இப்பொது பயன்பாட்டு மையமும் இயக்கத்தை துவக்க உள்ளது.

    ×