search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரங்கள்"

    • சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலுார்-தியாகதுருகம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக சாலையை ஆக்கி ரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், டீக் கடைகள், ஜெராக்ஸ் கடை, பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சவுரிராஜ், வாணாபுரம் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணையன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, ஊராட்சி தலைவர் வினிதாமகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தோப்புக்காரன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு
    • மேலூர் விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் வேளாண் துறையை தனித்துறையாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்வேலி அமைத்தல், மதிப்பு கூட்டும் எந்திரங்கள், களையெடுப்பான் கருவி, துகளாக்கும் கருவி, மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததன் காரணத்தினால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில வேளாண்எந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் தாலுகாவை சேர்ந்த 27 விவசாயிகளுக்கு ரூ.19.93 லட்சம் மானியத்தில் 21 பவர் டில்லர்கள், 6 விசைத்தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

    முன்னதாக குன்னூர் இளித்தொரையில் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 8 விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், 3 பேருக்கு விளை களையெடுப்பான் கருவிகளை வழங்கினார்.

    தமிழக அரசிடம் மானிய விலையில் பவர் டில்லர் பெற்ற சுள்ளிக்கூடு விவசாயி கோபால் என்பவர் கூறுகையில், எனக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 நாட்கள் செய்யும் வேலையை 3-4 மணி நேரத்தில் முடித்து விடலாம். இது எனக்கு வேளாண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி வழங்கப்பட்டு உள்ளது.

    சாந்தி கூறுகையில் இக்கருவி களையெடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நானும் என்னை போன்ற விவசாயிகளும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

    • ரூ.24 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பயனாளிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் மற்றும் விசைகளை எடுப்பான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார்.

    முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு 13 பயனாளி களுக்கு எந்திரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் வேளாண்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக குறு, சிறு விவசாயிகளுக்கு 75 சதவீதம் முதல் 100சதவீதம் வரை மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது. வேளாண் விற்பனை மையம் மூலம் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அதில் விவசாயிகள் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் பொழுது விற்பனை செய்து பயன்பெறலாம்.

    மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சோலார் மின்மோட்டார் இணைப்புகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுத்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களுக்கு தேவையான திட்டங்களை மானியத்தில் பெற்று கொள்ளலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றிங்களில் உள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண நிதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வங்கிகள் வழியாக வழங்கும் பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், வேளாண்மை துறை இணை எக்குநர் (பொறுப்பு) தனுஷ்கோடி, பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், திவ்யநாதன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் வேனில் கொண்டு வரப்பட்டது.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர குடோனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்கள் கலைக்கப்பட்டு உள்ளே கொண்டு அடுக்கி வைக்கப்பட்டன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

    அடுத்த வருடம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதில் 1400 பேலட் எந்திரங்களும், 1000 கட்டுப்பாட்டு கருவி எந்திரங்களும் அடங்கும். இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.

    முன்னதாக பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

    • ஆய்வுக்குப் பிறகு தகவல்
    • 4659 கட்டுப்பாட்டு கருவி களில் 136 கருவிகள் பழுது நீக்குவதற்காக பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் வி.வி.பேட் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் குமரி மாவட்ட த்தில் திங்கள்நகர் மற்றும் தோவாளை தாலுகா அலுவலகங்களில் பாது காப்பாக பூட்டி சீல் வைக்க ப்பட்டுள்ளன.

    தற்போது 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுது ஏற்பட்டுள்ள மின்னணு எந்திரங்களை சரி செய்யும் வகையில் பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 2 நாட்களாக திங்கள்நகரில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அதில் குறைபாடு உள்ள எந்திரங்களை தனியாக பிரித்து வைத்துள்ளனர்.

    இதை தொடர்ந்து இன்று தோவாளையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடை பெற்றது. தேர்தல் தாசில்தார் சுசிலா முன்னிலையில் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் 7270 மின்னணு எந்திரங்களில் 67 மின்னணுஎந்திரங்கள் பழுது ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை அதிகாரிகள் தனியாக வைத்துள்ளனர். இதேபோல் 4659 கட்டுப்பாட்டு கருவி களில் 136 கருவிகள் பழுது நீக்குவதற்காக பெல் நிறுவனத்துக்கு அனுப்ப ப்பட உள்ளது.

    மேலும் 4789 வி.வி.பேட் எந்திரத்தில் 3451 எந்திரங்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த எந்திரங்கள் அனைத்தும் பெல் நிறுவன த்துக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×