என் மலர்
நீங்கள் தேடியது "import"
- முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
- இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும்.
அமெரிக்காவில் இருந்து வருடத்திற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும். தற்போது, இந்தியா தனது LPG தேவைகளில் 50% க்கும் அதிகமாக இறக்குமதியை சார்ந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
- துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.
இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்திலிருந்து சாலை, ரெயில் வழியாக சணல் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, நவா ஷேவா துறைமுகம் வழியாக வங்கதேசத்தில் இருந்து சணல் பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 17 அன்று, அண்டை வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம்.
- ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.
எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க முடியாது என வணிகர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். துரதிஷ்டவசம் என்னவென்றால், விநாயகர் சிலைகளைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அந்த சிலைகளின் கண்களும் மிகச் சிறியதாக உள்ளன, கண்கள் சரியாக திறப்பது கூட இல்லை. ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை."
ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை தான். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நமது படைகள் கைகளில் மட்டும் இல்லை, 140 கோடி இந்தியர்கள் கைகளிலும் உள்ளது" என்று தெரிவித்தார்.
- வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
- துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் அதே சமயம் மும்பை, கொல்கத்தா துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் சில இந்தியப் பொருட்களுக்கு வங்கதேசம் தடை விதித்த நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அனைத்துப் பொருட்களை யும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக்கூடாது என்று வர்த்தக அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த ஒரு பொருட்களையும் இறக்குமதி செய்வதையோ அல்லது கொண்டு செல்வதையோ தடை செய்யும் வகையில் விதி சேர்க்கப்பட்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை திருத்தப்பட்டு உள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது கொள்கையின் நலனுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்க்பபட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த தடைக்கு எந்தவொரு விலக்குக்கும் இந்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப் படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சத வீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் இன்று அறிவிப்பை வெளியிடுகிறார்.
இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப் வர்த்தக குழுவுடன் ஆலோசனை நடத்தினார். வரி விதிப்பு தொடர்பாக அவர் ரோஸ் கார்டனில் நடைபெறும் விடுதலை தின நிகழ்ச்சியில் அறிவிப்பை வெளியிட்டதும் வரிவிதிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும்.
அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரியினை விதிக்கிறது. பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீதம், ஜப்பான் 700 சதவீதம் வரிகளை விதிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா சுமார் 300 சதவீதம் வரியை விதிக்கிறது.
இதுபோன்ற நாடுகளால், அமெரிக்கா நீண்ட காலமாக கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதிபர் டிரம்ப் எடுத்த துணிச்சலான முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
நமது ஏற்றுமதிக்கு அந்த நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா விதிக்க உள்ள பரஸ்பர வரிகளால் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
- நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது.
- மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்துள்ளது.
நெல்லை:
வீட்டு சமையலில் முக்கிய இடம் பிடிப்பது பல்லாரி மற்றும் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம். சுப நிகழ்ச்சி விருந்துகளிலும், ஓட்டல் சமையல்களிலும் இவற்றின் தேவை இன்றியமையாததாக உள்ளது.எனவே இவற்றின் தேவை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
நெல்லை, தென்காசி
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக பாவூர்சத்திரம், சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் இதனை அதிகம் பயிரிடுகின்றனர்.
பெரும்பாலும் தீபாவளி யை யொட்டிய 3 மாதங்கள் நெல்லை , தென்காசியில் அதிகளவு விளைச்சல் இருக்கும். மற்ற நாட்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.
விளைச்சல் அதிகம்
மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்துள்ளது. இதனால் அங்கு பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் வழக்கத்தை விட அதிகளவு உள்ளது.
வெளி மாநிலங் களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் நெல்லை மார்க்கெட்டு களில் பல்லாரி விலை கிலோ ரூ.10 முதல் 15 வரை குறைந்துள்ளது.
இறக்குமதி
இதுதொடர்பாக பாளை மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
பாளை, டவுன் மார்க்கெட்டுகளுக்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விளையும் பல்லாரி, சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது இங்கு போதிய விளைச்சல் இல்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
மும்பை, புனே, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயம் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் பகுதியில் விளைச்சல் இல்லாத போதும் வெளி மாநிலங்களில் இருந்து தேவைக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலை கணிசமாக குறைந்துள்ளது.
கிலோ ரூ.10 முதல் 15
இன்று 1 கிலோ பல்லாரி ரூ.10 முதல் 15 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்கிறோம். இதே போல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் 40 வரை விற்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து பல்லாரி கிலோ ரூ.6-க்கு வாங்கப்பட்டு வாகன வாடகை, இறக்குமதி கூலி உள்ளிட்டவைகளுடன் ரூ.10 முதல் தரத்திற்கேற்ப விற்று வருகிறோம் என்றார்.
- சீனாவிலிருந்து விலகிட பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன
- உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது
இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும்.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இனிமேல் உரிமம் வாங்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சில சிறப்பு சேவைகளை செயல்படுத்த அவசியமான ஒரு சில கணினிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்.
பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு மின்னணு பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாக இந்த கட்டுப்பாடு வருகிறது.
சீனாவிலிருந்து விலகி வேறு சில நாடுகளில் தங்கள் உயர்ரக மின்னணு பொருட்களை தயாரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார். அதன்படி அரசாங்கத்தின் பல துறைகளுக்கு கொள்கைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற ஹார்டுவேர் தயாரிப்பாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் ரூ.170 பில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.
அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை பெற விரும்பும் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வருடாந்திர மின்னணு இறக்குமதியில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் இறக்குமதி $60 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபேட் மற்றும் மேக்புக் கணினி வகைகளை இன்னமும் இந்தியாவில் தயாரிக்க தொடங்கவில்லை. இந்த ஊக்கத்தொகைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்நிறுவனத்தை இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கலாம் என கருதப்படுகிறது.
டெல் டெக்னாலஜிஸ், ஹெச்பி மற்றும் அஸஸ்டெக் போன்ற நிறுவனங்களும் இதனை பயன்படுத்தி தங்கள் கணிணி வகைகளை இங்கு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற முயற்சிகளின் விளைவாக உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இன்று பங்கு வர்த்தகத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 2% - 5% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
- கப்பல்கள் மூலம் வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் உறுதியேற்போம்.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது நாட்டின் கடல்சார் வாணிப துறை. நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பெரிய அளவிலான பொருட்களை எடுத்து செல்வதற்கு கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்தில் தேசிய கடல்சார் துறையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்குப் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் - 5 கொண்டாடப்படுகிறது.

'சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன்' கம்பெனி லிமிடெட்டின் முதல் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டியின் முயற்சி இந்தியாவின் வழிசெலுத்தலில் வரலாற்று தருணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது வெளிநாடுகளுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. குறிப்பாக கடல் வழிகள் முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
1964- ம் ஆண்டு ஏப்ரல் 5- ந் தேதி முதல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதில் இந்தியாவின் கடல்சார் துறையின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து விழிப்புணர்வு பரப்பும் நோக்கத்துடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு, திருட்டு மற்றும் மாறும் வர்த்தக இயக்கவியல் ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் சில சவால்களாகும். இந்தத் தொழிலின் போராட்டங்கள் குறித்து நமது கவனத்தை ஈர்ப்பதும், தீர்வுகளை திறம்பட கண்டறிய நாம் ஒன்றுபட உதவுவதும் இந்த தினத்தின் நோக்கம்.
கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக அதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் அதிகளவில் கடல்சார் தொழிலில் ஈடுபட வேண்டும்.
கப்பல்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி - இறக்குமதி வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் அனைவரும் இந்த தினத்தில் உறுதியேற்போம்.
- வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
- அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொரோனா தொற்று தொடங்கியது முதல் 4 ஆண்டாக இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன. தற்போது பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்தது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க உள்ளோம் என இலங்கை அரசு தெரிவித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டப்படி அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொருளாதார செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் என அரசு கணக்கிட்டுள்ளது.
- நாமக்கல்லில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
- கடந்த 2 ஆண்டுகளாக முட்டைகளுக்கான தீவன பொருட்கள் விலை ஏற்றத்தால் முட்டை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணை யாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி செயலாளர் முரளி, துணை தலைவர் பன்னீர்செல்வ ம்பொருளாளர் காளியண்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் மத்திய மீன்பிடி, கால்நடை பராமரிப்பு , பால்வளம் மற்றும் தகவல் பராமரிப்பு அமைச்சுகத்தின் இணை மந்திரி எல். முருகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்லில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு சத்துணவிற்கும், தமிழகம் , வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக முட்டைகளுக்கான தீவன பொருட்கள் விலை ஏற்றத்தால் முட்டை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 25 சதவீத கோழிப்பண்ணைகள் இழப்பை எதிர்கொள்ள முடியாமல் கோழிப்பண்ணைகளை மூடி விட்டனர். இதே சூழல் தொடர்ந்து நீடித்தால் மீதமுள்ள கோழிப்பண்ணைகளும் மூடும் அபாயம் ஏற்படும்.
தற்போது தீவன மூலப்பொருட்களில் முக்கியமாக மக்காச்சோளம் விலை உயர்ந்து கிலோ இப்போது ரூ 28 ஆக உள்ளது. மேலும் இப்போது போதிய மக்காச்சோளம் கிடைப்பதில்லை. தற்போது பெய்த கனமழையால் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பலத்த சேதமடைந்துள்ளது.
இதனால் மக்காச்சோளம் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளதால் கோழி தீவனம் தயாரிப்பு முடங்கி உள்ளன. எனவே வெளி நாடுகளில் இருந்து மரபணு ரீதியாக மாற்றப்பட்ட உடைந்த மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
அவற்றை மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களாகிய எம்.எம்.டி.சி மற்றும் டிஜிஎப்டி மூலம் இறக்குமதி செய்து பண்ணையாளர்களுக்கு வழங்கி விவசாயம் சார்ந்து கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது.
- ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.
திருப்பூர்:
சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே அதிக அளவில் நடக்கிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றங்கள் நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நடப்பு ஆண்டு ஜனவரி இறுதி வரை 74.65 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் 76 ரூபாயை கடந்தது.
அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது. தற்போது 79.88 ரூபாயாக காணப்படுகிறது.டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் கொடுக்கிறது. சாதகங்களைவிட பாதகமே அதிகம் என்பதால் டாலர் மதிப்பு உயர்வு தொழில் துறையினரை கவலை அடைய செய்கிறது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-
டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருப்பது உண்மைதான். அதேநேரம். இந்த நிலை நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது, டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர். இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளின் இணைக்கும் அக்சசரீஸ்களை அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பின்னலாடை நிறுவனங்கள் அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய கால நன்மையே அளிக்கும். தலைவலிதான் அதிகம்.
டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் துணி, பிரின்டிங் இங்க், அக்சசரீஸ், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை உற்பத்தி சார்ந்த மெஷினரிகளை உலகளாவிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுடனான வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது. இப்போது டாலர் மதிப்பு உயர்வு திருப்பூரில் ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களை மிகவும் பாதிக்க செய்கிறது.இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் போன்ற ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.வெளிநாடுகளிலிருந்து அதிநவீன எந்திரங்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.






