search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி
    X

    கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி

    • கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
    • 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் இடைத்தேர்தலை யொட்டி கிழக்கு தொகுதி க்குட்பட்ட 238 வாக்கு சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

    இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டரு மான கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரி க்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாக்குச் சாவடி களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்க ப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இணைய தளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்தி ரங்களும்,

    474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர்கள் தங்கள் அளித்தவாக்கினை சரிபார்க்கும் 310 எந்திரங்கள் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாக வும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு மாநக ராட்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 77 பேர் கொண்ட இறு திவேட்பாளர் பட்டியல் வெளியிட ப்பட்டதால் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியிலும் தேவைப்படுகின்றன.

    எனவே கூடுதலாக 1100 வாக்குபதிவு எந்திர ங்கள் ஒதுக்கப்பட்டு கூடுதல் எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    தொடர்ந்து கூடுதல் வாக்குபதிவு எந்திரங்கள் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×