search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Education"

    • தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
    • கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறி இருந்ததாவது:-

    நெல்லை மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.

    தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், எனது மனுவினை பரிசீலனை செய்து பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் எனக்கு பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தற்போது வரை நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார். பின்னர், இது குறித்து தமிழக பள்ளிக்கல் வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • 2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது.
    • தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாடப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி, பென்சில், ஜாமின்ரி பாக்ஸ், கிரையன்ஸ், சீருடை, பள்ளி பை, ஷீ உள்ளிட்ட பொருட்களும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்கள் கையில் பாட புத்தகம் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடபுத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

    2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமை அடைந்தன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அவை குடோன்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஒரு சில நாட்களுக்குள் இந்த பணி நிறைவடைந்துவிடும்.

    பள்ளி ஜூன் முதல் வாரத்தில் திறக்கும்போது அன்றைய தினமே பாட புத்தகங்கள் வழங்க கல்வித் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    • மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
    • 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது.

    முதல் நாள் பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அரும்பு , மொட்டு , மலர் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.

    இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்க்குள் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்தல் , எழுதுதுதலில், கணக்கீடு செய்தல் ஆகிவற்றில் குறிப்பிட்ட திறனை அடைய கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்து, இனி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டிடங்களின் உறுதித்தன்மை சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று, தடையில்லா சான்று ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் பரிந்துரைத்தது.

    மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் பரிந்துரையை ஏற்று, 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வழங்கப்பட்ட அரசாணையின்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படுகிறது.

    மேலும் இனி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 3 ஆண்டு காலத்துக்கு அல்லது கட்டமைப்பு ஸ்திரத்தன்மை சான்றிதழ் அல்லது கட்டிட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இதில் எது முந்தையதோ அதன்படி அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

    ஏற்கனவே 1994-ம் ஆண்டின் அரசாணையின்படி, நிரந்தர அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடரும்.

    அதே சமயம் அந்த பள்ளிகள் தமிழ்நாடு கட்டிடச் சட்டம் 1965-ன் கீழ் பள்ளிக் கட்டிடத்தை பொது கட்டிடமாக பயன்படுத்த அனுமதியளித்த சான்றிதழ், பள்ளி கட்டிடத்துக்கான கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழ், உள்ளூர் சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ், பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

    சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால் அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படும்.

    இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
    ×