search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valangaiman"

    • வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக தேங்கி இருக்கக்கூடிய வழக்குகளை எல்லாம் தீர்வு காணும் விதமாக வலங்கைமானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெட்டி ஷன் மேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் நன்னிலம் டி.எஸ்.பி. தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன், சப் இன்ஸ்பெக்டர் வில்வநாதன், காமராஜ், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, தேங்கி நிற்கும் மனுக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    • ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார்.
    • ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் (வயது 27) கொத்தனார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    மேலும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் 2 மாத கர்ப்பம் ஆன நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள தமிழழகன் மறுத்ததால் சினேகா நன்னிலம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார்புகாரின் அடிப்படையில் தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.

    • ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார்.
    • ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் (வயது 27) கொத்தனார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    மேலும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் 2 மாத கர்ப்பம் ஆன நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள தமிழழகன் மறுத்ததால் சினேகா நன்னிலம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார்புகாரின் அடிப்படையில் தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.

    • மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
    • 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது.

    முதல் நாள் பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அரும்பு , மொட்டு , மலர் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.

    இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்க்குள் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்தல் , எழுதுதுதலில், கணக்கீடு செய்தல் ஆகிவற்றில் குறிப்பிட்ட திறனை அடைய கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

    வலங்கைமான் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் பூண்டி குடியான தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜேஷ் (வயது 18). இவர் வலங்கைமானில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    இவர் தினமும் அரசு பஸ்சில் பூண்டியில் இருந்து வலங்கைமான் சென்று வருவார்.

    கடந்த 21-ந் தேதி ராஜேஷ் வலங்கைமான் சென்று விட்டு மாலையில் அரசு பஸ்சில் சந்திரசேகரபுரம் புறப்பட்டார். அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பின்பக்க படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தார்.

    பஸ் சந்திரசேகரபுரம் பகுதியில் சென்ற போது, படியில் தொங்கியபடி சென்ற ராஜேஷ் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு தஞசையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டிதோப்பை சேர்ந்த பஸ் டிரைவர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

    மாணவர் பலியான சம்பவம் சந்திரதேகரபுரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்துக்கு போதிய வசதி இல்லாமல் மாணவர்கள் கூட்டநெரிசலில் பயணம் செய்வது தான் முக்கிய காரணம். எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி ஊராட்சி பாப்பாக்குடியில் வசிப்பவர் வேணுகோபால்.

    வழக்கம் போல் வேணுகோபால் அவரது மனைவி ராஜேஸ்வரி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. ராஜேஸ்வரி அதிர்ச்சியடைந்து சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகைகள் மற்றும் ரூ.6ஆயிரம் திருட்டுபோனது. தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து அவர் வலங்கைமான் போலீசில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×