பெண்ணை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது

ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
பெண்ணை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் (வயது 27) கொத்தனார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

மேலும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் 2 மாத கர்ப்பம் ஆன நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள தமிழழகன் மறுத்ததால் சினேகா நன்னிலம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார்புகாரின் அடிப்படையில் தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com