வலங்கைமான் காவல் நிலையத்தின் சார்பில் பெட்டிஷன் மேளா

வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.
வலங்கைமான் காவல் நிலையத்தின் சார்பில் பெட்டிஷன் மேளா
Published on

நீடாமங்கலம்:

வலங்கைமான் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக தேங்கி இருக்கக்கூடிய வழக்குகளை எல்லாம் தீர்வு காணும் விதமாக வலங்கைமானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெட்டி ஷன் மேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் நன்னிலம் டி.எஸ்.பி. தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன், சப் இன்ஸ்பெக்டர் வில்வநாதன், காமராஜ், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, தேங்கி நிற்கும் மனுக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com