search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலங்கைமான்"

    • வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக தேங்கி இருக்கக்கூடிய வழக்குகளை எல்லாம் தீர்வு காணும் விதமாக வலங்கைமானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெட்டி ஷன் மேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் நன்னிலம் டி.எஸ்.பி. தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன், சப் இன்ஸ்பெக்டர் வில்வநாதன், காமராஜ், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, தேங்கி நிற்கும் மனுக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    வலங்கைமானில் தீர்வாய கணக்கு முடித்தல் இறுதி நாள் நிகழ்ச்சியில் 48 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் பசலி 1431ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடித்தல் நடைபெற்று வருகிறது. 
     
    இறுதி நாள் நிகழ்ச்சியில் வலங்கைமான்   வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட  232 மனுக்களில் 48மனுக்களுக்கு உடன் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் ஆய்வு செய்து தீர்வு காணப்படும் என தாசில்தார் தெரிவித்தார். 

    இந்நிகழ்வில் வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்னன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் தேவகி, மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள் சுகுமார், ராஜ்குமார், பழனிச்சாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×