search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood impact"

    • டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ளவில்லை.
    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெறும் என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருக்கிறது.

    ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

    தென்மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் எத்தகைய பேரழிவுகள் ஏற்பட்டன என்பது அனைவரும் அறிந்தது தான். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ளவில்லை. அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி எழுத்துத் தேர்வுகளை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

    தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் இந்தத் தேர்வை சரியாக எழுதாவிட்டால், அடுத்த வாய்ப்புக்காக இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் பலர் வயது வரம்பை கடந்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது.

    இந்தக் காரணங்களையும், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வு களை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
    • அரையாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை நுங்கப்பாக்கத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது;-

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ந்தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    தென் மாவட்டங்களில் மழை பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது பற்றி முதல்- அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

    • பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    • புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24*7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம். மேலும் பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டினை மட்டும் பின் தொடருமாறும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கேரளமும், கர்நாடகத்தின் சில மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. அம்மாநிலங்களில் பெய்து வரும் மழையால் தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இதைத் தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் போதுமானவையல்ல.

    கேரளத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அம்மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரள மழை-வெள்ளத்துக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலையில் மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது.

    அதேபோல், கேரளத்தையொட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளில் கொட்டும் மழை காரணமாக அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

    இதனால் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. காவிரியின் துணை ஆறுகளில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக திறந்து விடப்படுவதன் காரணமாக ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் குடிசைகளும், பயிர்களும் மூழ்கி மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இரு மாவட்டங்களிலும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கன்னியா குமரி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

    கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாகவே தமிழகத்தில் கரையோர மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களில் நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகி வருகிறது. நீலகிரி, வால்பாறை பகுதிகளில் கொட்டும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக மாவட்டங்களைப் பொறுத்தவரை இதுவரை நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் கேரளம் மற்றும் கர்நாடகத்தில் மழை அதிகரிக்கும் என்பதால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படலாம். அவ்வாறு திறக்கப்பட்டால் காவிரி மற்றும் கொள்ளிடம் வினாடிக்கு 3 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பலத்த மழை பெய்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய சூழலை சமாளிக்க இப்போதே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படலாம்.

    தமிழகத்தில் காவிரிக் கரையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுதல், வெள்ளப் பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்லாமல் தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் தான் இந்த குழுக்கள் செய்கின்றனவே தவிர, தொலைநோக்குப் பார்வையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, பாதுகாப்புப் பணிகளையோ செய்யவில்லை.

    தமிழகத்திலுள்ள காவிரி உள்ளிட்ட ஆறுகளில் எவ் வளவு தண்ணீர் வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல், நீர் செல்லும் பாதைகளில் அடைப்புகளை சரி செய் தல் உள்ளிட்ட பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆட்சியாளர் களின் தவறுகள் தான் காரணமாகும். அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட் டால் அதை தமிழக அர சாலும், தமிழ்நாட்டு மக்க ளாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது.

    எனவே, மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப் படைகளை முன்கூட்டியே அழைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    ×