என் மலர்
நீங்கள் தேடியது "Fish Recipes"
- குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும்.
- சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பூண்டு - 20 பல் பெரியது
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - ½ ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.
வஞ்சிர மீன் - 250 கிராம்
சோளமாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு

செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மீன் முட்டை - 200 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.
மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
மீன் துண்டுகள் - 6,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 100 மிலி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
வாழை இலை - தேவையான அளவு

செய்முறை :
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.
நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.
வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.
முள் இல்லாத மீன் - 250 கிராம்,
சோம்பு - சிறிதளவு,
வெந்தயம் - சிறிதளவு,
நசுக்கிய பூண்டு - 6
பெருங்காய பவுடர் - சிறிதளவு,
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை :
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காய பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதக்கியதும் மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மீன் தொக்கு ரெடி.
கனவா மீன் - அரை கிலோ
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியாத் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கனவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்தது வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம்செய்த கனவா மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும்.
உப்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வையுங்கள்.
அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.
துண்டு மீன் - 1/2 கிலோ,
சோளமாவு, மைதா - தலா 25 கிராம்,
முட்டை - 1,
கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
வெங்காயம் - 2,
பூண்டு - 6 பல்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 5,

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
ஊற வைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.
முள் நீக்கிய மீன் துண்டுகள் - அரை கிலோ
முட்டை - 3
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
இட்லி தட்டில் கழுவிய மீன் துண்டுகளை வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனை சுமாரான அளவுகளில் உதிர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அதனுடன் சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
இந்த கலவையில் உதிர்த்த மீனை கொட்டி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கிலோ,
தயிர் - 1 கப்,
கடுகு பவுடர் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
பெருஞ்சீரக தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
வினிகர் - 4 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,

செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தயிர், கடுகு பவுடர், உப்பு, சீரகத் தூள், பெருஞ்சீரக தூள், மிளகாய்த் தூள், கடுகு, மஞ்சள் தூள், வினிகர், இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்த இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு ஸ்க்யூவர் குச்சியில் ஒவ்வொரு துண்டுகளாக குத்தி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
துண்டு மீன் (Pomfret Fish) - 1 பெரிய கையளவு
தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு...
கறிவேப்பிலை - 1 கையளவு
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2-3
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 3-4
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை மீனில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!
சாதம் - ஒரு கப்
வறுத்த மீன் - 2 துண்டுகள்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தக்காளி சாஸ் - 1
வினிகர் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 2
முட்டை - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 1
கேரட், பீன்ஸ், கோஸ் - ஒரு கப்
நெய் - 3 ஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.
முட்டையை உதிரியாக பொரித்து வைக்கவும்.
கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்.
அடுத்து அதில் பொரித்த முட்டை, வறுத்த மீன் மற்றும் சாதத்தை கொட்டி கிளறி இறக்கவும்.
முள் இல்லாத துண்டு மீன் - முக்கால் கிலோ
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
சோள மாவு - ஒரு கைப்பிடி அளவு
கடலை மாவு - இரு கைப்பிடி அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
மீனை நன்றாக கழுவி வைக்கவும்.
கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ போல் அனைத்து மீனையும் செய்யவும்.