search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைடிஷ்"

    • இதை சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.

    தேவையான பொருட்கள்:

    ஆட்டுக்கறி - 500 கிராம்

    வெங்காயம் - 2

    கோதுமை மாவு - 4 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை - 3

    தனியா - 1 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 6

    கருப்பு ஏலக்காய் - 2

    பச்சை ஏலக்காய் - 6

    அன்னாசி பூ - 1

    கடுக்காய் - 1 சிறியது

    கிராம்பு - 6

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 துண்டு

    ஜாதிப்பத்திரி - 3 துண்டு

    கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 1 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.

    ஆட்டுக்கறியை நன்றாக கழுவி அதனுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்(முக்கால் பாகம்) சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொரியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும்.

    அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.

    வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.

    பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும்.

    பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்

    முட்டை - 2

    வெங்காயம் - 2,

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - சிறிது,

    உப்பு - 1/2 ஸ்பூன்,

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,

    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிக்கனில் எத்தனையோ வகை ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க..
    • சிக்கன்ல பொடிமாஸ் செஞ்சிருக்கீங்களா ? இப்போ செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    எலுமிபில்லாத சிக்கன் - 250 கிராம்

    வெங்காயம் - ஒன்று

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    குடைமிளகாய் - 1

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - கால் டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் -தேவைக்கு ஏற்ப

    செய்முறை:

    குடைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    வாணலியில் சிக்கன், உப்பு, மஞ்சள் தூள் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆற வைத்து மிக்சிஜாரில் போட்டு திரித்திரியாக அரைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த சிக்கன், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாயத் தூள், கரம் மசாலா தூள், சிறிது உப்பு(சிக்கன் வேகவைக்கும் போது உப்பு சேர்த்துள்ளது) சேர்த்து நன்றாக கிளறவும்.

    சிக்கன் உதிரிஉதிரியாக வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி

    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி

    பூண்டு - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த கிரேவி கறி குழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 50 கிராம்

    பெரிய வெங்காயம் - 2,

    தக்காளி - 4,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    பச்சை பட்டாணி - 1/4 கப்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    பட்டை - 1 துண்டு,

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு

    அரைக்க :

    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    இஞ்சி - ஒரு துண்டு,

    சோம்பு - அரை டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன்,

    தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

    முந்திரிப் பருப்பு - 10,

    பூண்டு - 6 பல்.

    செய்முறை :

    தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை போட்டு அதில் சூடான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற விடவும். நன்றாக ஊறியதும் சாதாரணமான தண்ணீரில் இரண்டு முறை நன்கு அலசி தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் இறுக்கமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    மீல் மேக்கரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் சிறிதளவு வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள மீல் மேக்கரை போட்டு வதக்குங்கள்.

    அடுத்து தக்காளி, பட்டாணியை சேர்த்து வதக்குங்கள்.

    இப்போது பட்டாணி சேர்த்து வதக்கிய பின்பு, தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் கலந்து நிமிடங்கள் வைக்கவும்.

    தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி தழை, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கி விடலாம்.

    இந்த கிரேவி சாதத்துடன் மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பச்சை மொச்சையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.
    • மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மொச்சை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சை மொச்சை மொச்சை - கால் கிலோ

    துவரம்பருப்பு - 100 கிராம்

    சின்னவெங்காயம் - 50 கிராம்

    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்

    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    சீரகம் - கால் டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒன்றரை கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த துவரம் பருப்புடன் பச்சை மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பச்சை மொச்சை பருப்பு கூட்டு ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மசாலா தூள் அரைக்க

    தனியா - 4 டீஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 4 டீஸ்பூன்

    வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 10

    பூண்டு - 4 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது

    எள்ளு - 2 தேக்கரண்டி

    கொப்பரை தேங்காய் துருவியது - அரை கப்

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்ய

    கத்திரிக்காய் - 1 கிலோ

    மிளகாய் தூள் - 4 டீஸபூன்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    அரைத்த மசாலா பொடி - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கத்திரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் 4 பாகமாக நறுக்கி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    * மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும்.

    * பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆற வைத்து ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும்.

    * உப்பு, மிளகாய் துள், அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கத்திரிக்காயில் உள்ளே வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து கத்திக்காயிலும் செய்யவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும்.

    * அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

    * கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும்.

    * 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும்.
    • இந்த இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வல்லாரைக்கீரை - ஒரு கப்,

    பூண்டு - 2 பல்,

    தேங்காய் துருவல் - கால் கப்,

    காய்ந்த மிளகாய் - 5,

    எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வல்லாரை துவையல் ரெடி.

    குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கீரை சாப்பிடாத குழந்தைகளும் இந்த ஸ்நாக்ஸை விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு

    கடலை மாவு - 2 கப்

    அரிசி மாவு - 4 டீஸ்பூன்

    முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி - சிறு துண்டு

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரிப்பருப்பு, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் 2 டீஸ்பூன் எடுத்து பக்கோடா மாவில் விட்டு பிசிறி கொள்ளவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • புளிச்சக்கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று புளிச்சக்கீரையில் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    புளிச்சக்கீரை - 4 கட்டு,

    வெந்தயம் - 1 டீஸ்பூன்,

    தனியா - 1 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    கடுகு உளுந்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,

    எள் - 3 டீஸ்பூன்,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    வற்றல் மிளகாய் - 4 அல்லது 5,

    எண்ணெய், உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை

    புளிச்சக்கீரை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையை போட்டு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் வெந்தயம், தனியா, எள், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி, ஆறியவுடன் அரைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கோங்குரா பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து வதக்கினால் சுவையான கோங்குரா ஊறுகாய் ரெடியாகிவிடும்.

    இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • புளிச்சக்கீரயில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது.
    • இந்த கீரை சாப்பிட்டால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

    தேவையான பொருட்கள்

    புளிச்சக்கீரை - 2 கப்,

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,

    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு,

    வேர்க்கடலைத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

    சர்க்கரை மற்றும் பெருங்காயம் - 1 சிட்டிகை,

    கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்.

    செய்முறை

    புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பை போட்டுத் தாளிக்க வேண்டும்.

    அதில் தனியா மற்றும் மிளகாய் தூளைச் சேர்க்கவும்.

    அதன்பின் அதோடு புளிச்சக்கீரையைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் சிறிதளவு பெருங்காயம், சீனி, உப்பு சுவைக்கேற்ப சேர்க்க வேண்டும்.

    புளிச்சக்கீரை நன்றாக வதக்கியதும் ஆறிய வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான கோங்குரா சட்னி ரெடியாகிவிடும்.

    இந்தச் சட்னியை இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பலாக்காய் வைத்து சமைக்கும் ரெசிபி இது.
    • சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பலாக்காய் - 1 சிறியது

    பிரியாணி இலை - 2

    காய்ந்த மிளகாய் - 3

    மிளகு - 1 டீஸ்பூன் (லேசாக இடித்தது)

    பெருங்காயம் - ½ டீஸ்பூன்

    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

    பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது

    சின்ன வெங்காயம் - ½ கிலோ

    பூண்டு - 20 பல்

    இஞ்சி - 3 அங்குலத் துண்டு

    எண்ணெய் - தேவையான அளவு

    இளஞ்சூடான தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கரம் மசாலாவுக்கு:

    கருப்பு ஏலக்காய் - 2

    பச்சை ஏலக்காய் - 3

    ஜாதிக்காய் - 1

    ஜாதிபத்திரி - 1

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    கிராம்பு - 10

    கல்பாசி - 2 கிராம்

    பட்டை - 1

    அன்னாசி பூ - 1

    செய்முறை:

    கரம் மசாலா தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும்.

    பலாக்காயை மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இதனால், பலாக்காயில் உள்ள பிசுபிசுப்பு குறையும், காய் கருத்துப் போகாமல் இருக்கும்.

    இஞ்சி மற்றும் 10 பல் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பின்பு சின்ன வெங்காயம், பலாக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.

    10 நிமிடங்கள் கழித்து வாணலியைத் திறந்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.

    3 நிமிடங்களுக்குப் பிறகு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்துக் கிளறி, வாணலியை மூடி வைக்கவும்.

    பத்து நிமிடங்களுக்குப் பின்னர், தோலுடன் கூடிய 10 பல் பூண்டு, அரைத்த கரம் மசாலா, கருப்பு மிளகு, காய்ந்த வற்றல், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    இப்போது 300 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்து அதிகமான தீயில் 8 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

    பின்பு குறைந்த அளவு தீயில் 25 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அவ்வப்போது கிளறி விடவும்.

    கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில், அடுப்பை அணைத்து நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான கதல் மசாலா தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×