search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைவம்"

    • இறை வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.
    • நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

    * பஞ்சாயதன பூஜையை, காலை எழுந்தவுடன் குளித்து விட்டு பூஜை அறையில் அமர்ந்து செய்வது விசேஷம். இந்த பூஜை செய்யும் பொழுது வடக்கு திசை அல்லது கிழக்கு திசையை நோக்கி உட்கார்ந்து கொண்டு செய்வது சிறப்பானது. பஞ்சாயதன சிலைகளை கிழக்கு நோக்கி வைத்து நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்யலாம். அல்லது வடக்கு திசை நோக்கி பஞ்சாயதன சிலைகளை வைத்துவிட்டு, நாம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜிக்கலாம்.

    * பூஜைக்கு வாசனை தைலம், பஞ்சகவ்யம், பஞ்சா மிர்தம், பசும்பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், அரைத்த சந்தனம், சுத்த ஜலம் ஆகியவை சிறப்பானவை. இவற்றில் நம்மால் எதைக் கொண்டு பூஜிக்க முடியுமோ, அதைக் கொண்டு பூஜை செய்யலாம்.

    'ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் ஸ்ரியமிச்சேத் ஹுதாஸாத் ஈஸ்வராத் க்ஞானமன்விச்சேத் மோக்ஷமிச் சேஜ் ஜனார்தனாத்' என்ற ஒரு சுலோகத்தின்படி பஞ்சாயதன பூஜையில் சூரிய பகவானை பூஜிப்பதால் நல்ல ஆரோக்கியமும், சிவபெருமானை பூஜிப்பதால் நல்ல ஞானம் மற்றும் தெளிவான சிந்தனையும், மகாவிஷ் ணுவை போதிப்பதால் பட்டம், பதவி, புகழ், சத்ரு ஜெய மும், கணபதியை பூஜிப்பதால் தடைகள் விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அம்மனை பூஜிப்பதால் மங்கலம் உண்டாகும்.

    இந்த பூஜையை வழக்கமாக செய்யும் ஆண்கள் வெளியில் சென்று இருக்கும் பொழுதும், பெரியோர்கள் இல்லாத பொழுதும், பெண்களும் மேற்கொள்ளலாம்.

    * கிடைப்பதற்கு அரிய இந்த மானிட பிறவியில், வாய்ப்பைப் பயன்படுத்தி எளிய முறையில் இந்த பூஜையை செய்யலாம். சக்திக்கு ஏற்ற வகையில் பூஜை பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.

    * பஞ்சாயதன பூஜையில் முக்கியமான விசேஷம் என்னவென்றால், ஒருவர் எந்த தெய்வத்தை பிரதானமாக கருதுகிறாரோ, அந்த தெய்வத்தை மையமாக வைத்தும், மற்ற தெய்வங்களை சுற்றி வைத்தும் பூஜிப்பார்கள். நடுநாயகமாக சிவபெருமானை வைத்து பூஜிப்பவர்கள், வடகிழக்கு திசையில் இருந்து வலமாக விஷ்ணு, சூரிய பகவான், கணபதி மற்றும் அம்பிகையை வைத்து பூஜிக்கலாம்.

    இதற்கு 'சிவ பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அம்பாளை பிரதானமாக வைத்து 'சக்தி பஞ்சாயதன பூஜை' செய்வார்கள். அம்பிகையை நடுவிலும், தென் மேற்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், விஷ்ணு, சிவபெருமானை வைத்தும் பூஜை செய்வார்கள். மகா விஷ்ணுவை நடுவில் வைத்து பூஜிப்பவர்கள், தென் கிழக்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து 'விஷ்ணு பஞ்சாயதன பூஜை' செய்வார்கள்.

    விநாயகப் பெருமானை மையமாக வைத்து பூஜிப்பவர்கள், தென்கிழக்கில் இருந்து வலமாக விஷ்ணு, சூரியன். அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து செய்வது 'கணபதி பஞ்சாயதன பூஜை' ஆகும். சூரிய பகவானை பிரதானமாக வைத்து பூஜிப்பவர்கள், மையத்தில் சூரிய பகவானையும் தென்கிழக் கில் இருந்து வலமாக விஷ்ணு, கணபதி, அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து பூஜிப்பார்கள். இதற்கு 'சூரிய பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அவரவருக்கு விருப்பமான தெய்வங்களை பிரதானமாக வைத்து, ஐந்து விதமாக பூஜை செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

     பூஜையின் போது சொல்ல வேண்டிய சுலோகம்

    நம: சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே

    ஸநந்தினே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம:

    நம: சிவாப்யாம் நவ யௌவனாப்யாம்

    பரஸ்பராச் லிஷ்ட வபுர்தராப்யாம்

    நகேந்த்ர - கன்யா -வ்ருஷ - கேதனாப்யாம்

    நமோ நம: சங்கர - பார்வதீப்யாம்

    சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் சுரேஷம்

    விச்வாகாரம் ககன ஸத்ருசம் மேக வர்ணம் சுபாங்கம்

    லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகி ஹ்ருத்யான கம்யம்

    வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வலோகைக நாதம்

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே

    சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.

    இந்த சுலோகத்தைச் சொல்லி பூஜையை முடித்த பின்னர், ஐந்து முறை இறைவனை வணங்க வேண்டும்.

    • அற்புதமான பலன் தரக்கூடிய அபூர்வமான வழிபாட்டு முறை.
    • இந்த வழிபாட்டிற்கு எந்திரமோ, விக்கிரகமோ கிடையாது.

    ஆதிசங்கரர் இந்து மதத்தில் பல பிரிவுகளாக சிதறிக்கிடந்த வழிபாடுகளை ஒருங்கிணைத்து, சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், கணாபத்யம் என்று வகைப்படுத்தினார். இதில் கவுமாரம் மற்றும் கணாபத்யம் ஆகியவை சைவ மதத்தின் துணைப் பிரிவுகளாகவே சிலரால் சொல்லப்படும். இந்த 6 வகையான வழிபாட்டு முறைகளையும் மேலும் எளிமைப்படுத்தி, அனைவருமே தினமும் எளிய முறையில் பூஜிக்கக்கூடிய, மறைந்திருந்த பஞ்சாயதன பூஜையை வெளிப்படுத்தினார். வசதி உள்ளவர்கள் இதை பெரிய அளவில் விஸ்தாரமாக தினமும் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் குறைந்தபட் சம் 10 அல்லது 15 நிமிடத்தில் இந்த பூஜையை செய்து முடித்து விடலாம். அற்புதமான பலன் தரக்கூடிய ஒரு அபூர்வமான வழிபாட்டு முறை இதுவாகும்.

    இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், இதற்கு எந்திரமோ அல்லது விக்கிரகமோ கிடையாது. இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து மூர்த்தங்களை வைத்து பூஜிக்கக்கூடிய முறை இது. எனவே இதற்கு 'பஞ்சாய தன பூஜை' என்று பெயர் வந்தது.

     சிவபெருமானுக்குரிய இயறகை மூர்த்தம்- பாண லிங்கம், அம்பாளுக்குரியது சொர்ணமுகி, விஷ்ணுவிற்குரியது சாளக்கிராமம், சூரியனுக்குரியது ஸ்படிகம், விநாயகருக்குரியது சோனாபத்திரம் என்னும் கல். ஈஸ்வரன், அம்பாள், மகாவிஷ்ணு, விநாயகப் பெருமான், சூரிய பகவான் ஆகிய ஐந்து பேர்களை சேர்த்து வைத்து பூஜை செய்யக்கூடிய இந்த முறை மிக விசேஷமாக கருதப்படுகிறது.

    இதில் சிவபெருமானுக்குரிய பாணலிங்கம் இயற்கையாகவே நர்மதை நதிக்கரையில் கிடைக்கும். பாணாசுரன் தன் ஆயிரம் கரங்களால் பாணலிங்கத்தை தினமும் பூஜித்து இந்த நதியில் விட்டதாக சொல்வர். இந்த பாணலிங்கத்தில் சிவ பெருமான் இருப்பதாக ஐதீகம்.

    அம்பிகையின் சொரூபமான சொர்ணமுகி என்னும் கல், ஆந்திராவில் சொர்ணமுகி ஆற்றில் இயற்கையாகவே கிடைக்கிறது. இதில் தங்க ரேகைகள் காணப்படும். அடுத்து, விஷ்ணு பகவானின் வடிவமாக விளங்கக் கூடிய சாளக்கிராமம். இது நேபாள தேசத்தில் முக்திநாத் ஷேத்திரத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது.

    சூரிய பகவானுக்குரிய ஸ்படிகமும், தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் என்ற இடத்திற்கு அருகில் இயற்கையாகவே கிடைக்கிறது. விநாயகப்பெருனின் உருவத்திற்குரிய மூர்த்தமாக சொல்லப்படும் சோனா பத்திரக்கல், கங்கை கலக்கக்கூடிய சோனாநதியின் கரையில் கிடைக்கப்பெறுகிறது. இந்த ஐந்து மூர்த்தங்களையும், ஐந்து தெய்வங்களாக பாவித்து பூஜிப்பதால், சகல நலன்களும் தேடி வரும் என்கிறார்கள்.

    மேற்கண்ட தெய்வ மூர்த்தங்கள் அனைத்து சிறிய வடிவங்களிலேயே கிடைக்கப்பெறும். இவற்றில் சாளக்கிராமம் மட்டுமே சற்று பெரியதாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரு சின்ன மரப்பெட்டியில் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு எளிய முறையில்

    தினமும் அபிஷேகம் செய்யலாம். மந்திர உபதேசங்கள் தெரிந்தவர்கள் அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம். அல்லது எளிய முறையில் எட்டு அல்லது 16 நாமாவளி சொல்லி, துளசி, வில்வம் போன்ற இலைகளாலோ, சிறிய அளவிலான பூக்களைக் கொண்டோ பூஜை செய்யலாம்.

    சிறிய மரப்பெட்டியில் வைக்கப்படும் இந்த மூர்த்தங்களை, வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் கையில் எடுத்துச் சென்று அங்கு வைத்தும் பூஜையை நடத்த முடியும். இவற்றிற்கு நைவேத்தியமாக படைக்க பெரிய செலவு எதுவும் தேவையில்லை. நம்மால் எது முடியுமோ, அதை நைவேத்தியமாக படைக்கலாம்.

    உலர்ந்த திராட்சை, கல் கண்டு போன்றவை கூட போதுமானது. அதையே கொஞ்சம் விரிவாக செய்யக்கூடியவர்கள், தினமும் நீராடி, அன்னம் வைத்து நெய் (மகா நைவேத்தியம்) விட்டு பூஜிக்கலாம். வெளியே செல்லும்போது பூஜைக்குரிய சந்தனம், குங்குமம், துளசி, வில்வம் எடுத்துக்கொண்டு செல்லலாம்.

    துளசி, வில்வம் சற்று வாடினால் கூட கவலைப்பட வேண்டாம். தொடர் பயணத்தில் தினமும் எங்கு நமக்கு நேரம் கிடைக்கிறதோ, அங்கேயே பஞ்சாயதன பூஜையை செய்யலாம். சொர்ணசே பஞ்சாயதன பூஜையில் முருகனுக்குரிய வழிபாடு சொல்லப்படவில்லை.

    ஆனால் சிலர் முருகப்பெருமான் வழிபாடு செய்ய வேண்டும் என கருதுவார்கள். அவர்கள் வேல் வைத்து முருகப்பெருமானை மற்றவற்றோடு சேர்த்து பூஜிக்கலாம். வெளியில் செல்லும் போதும் அந்த வேலை எடுத்துச் செல்லலாம். (சில இடங்களில் வேலையும் சேர்த்து வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு).

    எப்படி கூப்பிட்டாலும் பக்தியோடு அழைப்பவர்களுக்கு, இறைவன் கட்டாயம் வந்து அருள் செய்வார். சிவன், விஷ்ணு, கணபதி, சூரியன், அம்பாள் ஆகிய தெய்வங்களுடன் பஞ்சாயதன பூஜையை செய்பவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் ஏற்றம் உண்டு. சகல பாவங்களும் விலகும். பிரம்மஹத்தி, கோஹத்தி, சிசுஹத்தி போன்ற தோஷங்களும் நிச்சயமாக நீங்கும். இந்த ஒவ்வொரு மூர்த்தங்களிலும் இயற்கையாகவே சுவாமி இருக்கிறார் என்று அறிந்து நம் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரும் என்பார்கள். பஞ்சாயதன வழிபாட்டு முறையில் இறைவனை பூஜித்து வருபவர்களுக்கு, எந்த விதமான செய்வினைகளோ, கெடுதல்களோ, அகாலமரணமோ, விபத்துகளோ ஏற்படாது என சொல்லப்பட்டுள்ளது.

    • அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார்.
    • கோவிலின் நுழைவாயில் நேபாள பௌத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர்.

    நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர்.

    அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார்.

    இக்கோவிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் நுழைவாயில் நேபாள பௌத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர்.

    எனவே இத்திருக்கோவில் சைவ, சமண, வைணவ, பௌத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

    • சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.
    • ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    மும்பை:

    மும்பையில் உள்ள பவாய் ஐ.ஐ.டி. விடுதியில் சமீபத்தில் சைவ மாணவர்கள் மட்டும் உட்கார வேண்டும் என ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையை அடுத்து அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 3 விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.

    இதை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதுகுறித்து அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் எக்சில் வெளியிட்ட தகவலில்:- ஐ.ஐ.டி. பாம்பே அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது என கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    • பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.
    • வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.

    திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

    சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

    ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.

    பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.

    வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.

    ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.

    குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.

    இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.

    என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.

    • திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது.
    • மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

    ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு ஆலயங்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமாகும்.

    ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.

    சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும். அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் என்றால் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.

    இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள். மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.

    இத்தகைய திருமணங்களை நடத்த ஊருக்கு ஊர் பழக்க & வழக்கம் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் பழமை மரபு மாறாமல் பல நூற்றாண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய அர்ச்சகர்களே ஆண் & பெண் வேடமிட்டு திருக்கல்யாணத்தை நடத்துவார்கள். இந்த சேவைக்காகவே இக்கோவிலில் இரண்டு விதமான அர்ச்சக பரம்பரையினர் காலம், காலமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    குலசேகர பட்டர் பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மாப்பிள்ளை வேடம் ஏற்பார். உக்கிரப்பாண்டி பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மணமகள் வேடம் ஏற்பார். அவர்களை இறைவன், இறைவியாகக் கருதி திருக்கல்யாணம் நடத்தப்படும்.

    விழாவின் தொடக்கமாக விக்னேசுவர பூஜை நடத்துவார்கள் பிறகு பிரம்மஹோமம், மாங்கலய பூஜைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டுவார்கள்.

    அதன்பிறகு திருக்கல்யாணத்தின் முக்கியச் சடங்கான மங்கல நான் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். இறைவிக்கு திருமாங்கல்யம் கட்டப்படும் போது, பெண்கள் தாங்களும் தங்களுக்கு திருமாங்கல்யத்தை அணிந்து கொள்வார்கள்.

    மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் போது திருமால் கன்னிகாதானம் செய்து வைக்க, பிரம்மன் வேள்வி நடத்த, சொக்கநாதரான சிவன், மீனாட்சியம்மையை மணக்கிறார்.

    திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. அதை மதுரை தலத்தில் சிறப்புற காணலாம்.

    இந்த திருக்கல்யாணத்தின் போது பக்தர்கள் இறைவன், இறைவிக்கு பட்டுப்புடவைகள் திருமாங்கல்யம் மற்றும் மொய்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. கோவில் சார்பாக திருமாங்கல்யம், மஞ்சள் கிழங்கு, விபூதி, குங்குமம் கொண்ட பிரசாதபையை பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.

    தனி நபர்களும் வேண்டுதலின் பேரில், பக்தர்களுக்கு மாங்கல்யப் பிரசாதம் கொடுப்பார்கள். இறைவன், இறைவிக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்பவர்களுக்கு கல்யாண யோகம் உண்டாகும்.

    மதுரையைப் போலவே காஞ்சீபுரத்தில் காமாட்சி & ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாநடைபெறும் போது அதே மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இறைவனும், இறைவியும் மாலை மாற்றி கொள்ளும் போது இவர்களும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

    திருமாங்கல்யம் கட்டப்பட்ட பிறகு இறைவன், இறைவி சார்பாக மணக்கோலத்தில் உள்ள சிவாச்சாரியார்கள் அக்னி வலம் வருதல், பொரி தூவுதல், அம்மி மிதித்தல் போன்ற சடங்குகளை நடத்தி காட்டுவார்கள்.

    வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் இறைவன், இறைவிக்கு பதிலாக அர்ச்சர்களே மணமக்கள் வேடம் அணிந்து மாலை மாற்றி கொள்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரிவாரத் தெய்வங்களாக வரதராஜ பெருமாள், நரசிங்க பெருமாள் இருப்பதால், இத்தலத்தில் ஆண்டுக்கு மூன்று தடவை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மார்கழி மாதம் பார்த்தசாரதி & ஆண்டாள் திருமணம், மாசி மாதம் ரங்கநாதர் & வேதவல்லி தாயார் திருமணம் மற்றும் பங்குனி உத்திர நாளில் நடக்கும் திருமணம் என 3 தடவை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

    தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திரம் தினத்தன்று தான் திருக்கல்யாண விழாக்கள் நடத்தப்படுகிறது. அன்று பக்தர்கள் விரதம் இருப்பது காலம், காலமாக நடந்து வருகிறது. இந்த விரதத்துக்கு திருமண விரதம் என்று பெயர்.

    வீட்டில் மங்கலகாரியம் நடப்பதற்கு துணை புரிவதால், எல்லா தலங்களிலும் திருக்கல்யாண விழாக்கள் ஆண்டு தோறும் தவறாமல் நடத்தப்படுகிறது.

    எந்த ஊரில் உள்ள ஆலயத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் மிகச் சிறப்பாக திருக்கல்யாணம் நடத்தப்படுகிறதோ அந்த ஊரில் உள்ள பெண்கள் திருமண யோகத்தை உரிய காலத்தில் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    ஆனால் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஐதீகத்தை புரிந்து கொள்ளாமல் ஆலயங்களில் நடத்தப்படும் திருக்கல்யாண விழாக்களில் கலந்து கொள்ளாமல் உள்ளனர்.

    எனவே இனியாவது ஆலய திருக்கல்யாணங்களில் உள்ள ரகசியத்தை புரிந்து கொண்டு அதில் பங்கேற்று இறைவழிபாடு செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள சில தலங்கள், இறைவன், இறைவி திருக்கல்யாணத்துக்கு மிகவும் சிறப்புப் பெற்றவை. இல்வாழ்க்கைக்கு அதிக பலன்களை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றவை. அவற்றை தெரிந்து கொண்டு வழி பட்டால் உரிய பலனை பெற முடியும்.

    உலகமும், உயிர்களும் தொடர்ந்து இயங்க, இறைவன் நமக்கு ஆற்றும் பேரருளை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கல்யாணங்கள் நடத்தப்படுகிறது என்ற உண்மையை நமது வாரிசுகளுக்கு நாம் அவர்களை ஆலயங்களுக்கு அழைத்து செல்லும் போது எடுத்துச் சொல்ல வேண்டும்.

    திருக்கல்யாண நிகழ்ச்சிகளை வெறும் சடங்காக கருதாமல் அதில் உள்ள தாத்பர்யங்களை அனைவரும் அறிந்து கொள்ள செய்தால்தான் திருக்கல்யாண நிகழ்வுகள் மூலம் வெற்றியும் பலனும் கிடைக்கும்.

    இதே போல ஆலயங்களில் கார்த்திகை மாதம் நடத்தப்படும் சங்காபிஷேகத்தால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து வற்றாத செல்வத்தை வழங்குவார் என்பது ஐதீகம். அது பற்றி அடுத்த வாரம் விரிவாக காணலாம்.

    • இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.
    • சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை

    திருமண யோகம் தரும் தெய்வத் திருமணங்கள்!

    ஆலயங்களில் இறைவழிபாடு தவிர அது தொடர்புடைய எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

    பழமையான ஆலயங்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.

    இந்த திருவிழாக்கள் ஒவ்வொன்றின் பின்னால், பக்தர்களின் வாழ்க்கைக்கு உதவும் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.

    இதனால் தான் ஆலயங்களில் நம் முன்னோர்கள் வகுத்து வைத்தப்படி திருவிழாக்களை நாம் இப்போதும் தொய்வின்றி நடத்தி வருகிறோம்.

    சைவக்கோவில், வைணவக்கோவில், சக்தி ஆலயம் என்று எதுவாக இருந்தாலும் விழாக்கள் நடத்தும் போது பக்தர்களிடம் தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.

    மனதைப் பக்குவ நிலைக்கு உயர்த்தியுள்ள பக்தர்கள் ஆலயத் திருவிழாக்களின் போது தாங்கள் ஆன்மா உருக, உருக விழாக்களில் பங்கேற்பார்கள்.

    அத்தகைய விழாக்களில் திருக்கல்யாணத் திருவிழா தனித்துவம் கொண்டது.

    தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் 10 நாட்கள் பெரிய திருவிழாக்கள் நடத்தும்போது திருக்கல்யாண விழா 6ம் திருநாள் அல்லது 7ம் திருநாளாக நடத்தப்படும்.

    சில ஆலயங்களில் தனியாகவும் திருக்கல்யாண விழா நடைபெறுவது உண்டு.

    ஆலய வழிபாடுகளில் ஒவ்வொரு மாதத்துக்கும், ஒவ்வொரு விழாவால் சிறப்பு ஏற்படும். அந்த வகையில் பங்குனி மாதம் உத்திரம் நடசத்திரம் திருநாள் மிகுந்த மகத்துவம் கொண்டது.

    இந்த நாளில் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று எந்தெந்த தெய்வங்களுக்கு திருமணம் நடந்தது தெரியுமா?

    * சிவபெருமான் & பார்வதி திருமணம்

    * ஸ்ரீரங்கமன்னார் & ஆண்டாள் திருமணம்

    * தேவேந்திரன் & இந்திராணி திருமணம்

    * பிரம்மா & சரஸ்வதி திருமணம்

    * ஸ்ரீராமர் & சீதை திருமணம்

    * விநாயகர் & சித்தி, புத்தி திருமணம்

    * முருகன் & வள்ளி திருமணம்

    * நந்தி & சுயம்பிரகாசை திருமணம்

    இப்படி இறை திருமணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    அதை பிரதிபலிக்கும் வகையில் ஆலயங்களில் தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

    ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "கல்யாணம்" என்று பெயர். ஆனால் ஆலயத்தில் இறைவனும், இறைவியும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "திருக்கல்யாணம்" என்று பெயர்.

    இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும். இதில் போகம் என்பது இன விருத்தியை குறிக்கும். உலகில் உள்ள 84 லட்சம் ஜீவன்களுக்கும் இறைவன் இந்த சக்தியை கொடுத்துள்ளான்.

    சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதின் அடிப்படையில் சிவசக்தி சங்கமத்தால், இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன. இறைவன் போக வடிவத்தில், அந்த தத்துவத்தில் இல்லாமல் போனால் உலகத்து உயிர்கள் எதுவும் போக வாழ்க்கை வாழ இயலாது.

    இதை கருத்தில் கொண்டே ஆலயங்களில் இறைவனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் வைபவத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

    அதோடு அந்த திருக்கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளையும் வகுத்து தந்துள்ளனர்.

    நமது பெற்றோர் திருமணத்தை நாம் காண முடிவதில்லை. என்றாலும் சஷ்டியப்பூர்த்தி விழா மூலம் பெற்றோர் திருமணத்தை மகன்களும் மகள்களும் கண்குளிர கண்டுகளிக்க முடிகிறது.

    அது போல இறைவனது திருக்கல்யாணத்தை ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தி அவனது அருளை பக்தர்கள் பெற்று மகிழ்கிறார்கள்.

    ஒரு இடத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினால், இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தையும் நடத்துவார்கள்.

    நம் முன்னோர்கள் இதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர்.

    ஆனால் கும்பாபிஷேகம் நடத்தும் போது செய்யப்படும் திருக்கல்யாணமும், ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தும் திருக்கல்யாணமும் வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு தடவை இறைவன், இறைவிக்கு நடத்தப்படும் திருக்கல்யாணம், ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.

    ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.

    சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும். அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் என்றால் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.

    இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள். மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.

    • வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    முறுக்கு - தேவையான அளவு

    வெங்காயம் - 1

    வெள்ளரிக்காய் - 1

    தக்காளி - 1

    ஓமப்பொடி - 1 கப்

    சீஸ் துருவல் - 1 கப்

    சட்னி தயாரிக்க:

    புதினா - ஒரு கைப்பிடி

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிய துண்டு

    பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    சட்னி தயாரிக்க:

    ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இந்த சட்னியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    சாண்ட்விச் தயாரிக்க:

    வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

    முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும்.

    பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.

    இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும். பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும்.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும்.
    • இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவு.

    தேவையான பொருட்கள்

    பார்லி தூள் - 2 டீஸ்பூன் (பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்த பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி)

    பார்லி அரிசி - 4 டீஸ்பூன்

    பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்

    மிளகு தூள் - 3 டீஸ்பூன்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    துளசி இலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

    பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டீ, காபியுடன் சாப்பிட இந்த போண்ட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபியை 20 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - 200 கிராம்,

    கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - 1

    தக்காளி, பச்சை மிளகாய் - தலா - 2,

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    மசித்த பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.

    இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பச்சைப் பட்டாணி போண்டா ரெடி.

    குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பெரும்பலானோர் வீட்டில் காலை உணவு இட்லியாக தான் இருக்கும்.
    • இன்று புதுவகையான இட்லியை செய்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - 2 கப்

    சர்க்கரை- 3 தேக்கரண்டி

    உளுந்தம் பருப்பு - 3/4 கப்

    தேங்காய் பால் - 3/4 கப்

    உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

    உலர் ஈஸ்ட் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    அரிசி மற்றும் உளுந்தப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 5 மணி நேரத்திற்கு ஊற வைத்து, அரசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதனுடன் அரைத்த 2 மாவையும் ஒன்றாக சேர்த்து கலந்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் உப்பு, 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து, மாவை தனியாக வைக்கவும்.

    சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து தனியாக வைக்கவும்.

    இந்தக் கலவையை மாவுடன் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    3 மணி நேரம் கழித்து மாவை வாழை இலைகளை கோன் போல் செய்து கொள்ளவும். செய்த கோனை டம்ளர்களில் வைக்கவும். அப்போது மாவு கீழே ஊற்றாது. அந்த கோனில் மாவை ஊற்றி வழக்கம் போல இட்லி சட்டியில் வைத்து மூடி 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.

    வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் கோன் இட்லி ரெடி.

    இதனுடன் சட்னி,சாம்பார், சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் போது இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×