search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chips"

    • வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
    • சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .

    அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

    சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.




    இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

    மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என  நம்பி உள்ளது.

    • குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக நேற்று மாலை அவளது குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் விசாரணை நடத்தியபோது சிறுமி அவளது பக்கத்து வீட்டுக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து பக்கத்தை வீட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் சிறுமியை கொலை செய்ததாக கூறினார். சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன். சிறுமி சிப்ஸ் வாங்கி வந்து தின்றாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமியை அடித்து கொலை செய்தேன் என்றான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனது சகோதரர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தெக்கலூர் புதுப்பாளையம் நத்தகாட்டுபிரிவில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
    • சிப்ஸ்கள் அடுக்கி வைத்துள்ள 128 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட குடோன் முழுவதும் தீ பரவியது.

    அவிநாசி

    அவிநாசி அருகே தெக்கலூர் புதுப்பாளையம் நத்தகாட்டுபிரிவில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிப்ஸ்கள் அடுக்கி வைத்துள்ள 128 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட குடோன் முழுவதும் தீ பரவியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சிப்ஸ்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

    இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாழைக்காயில் பல ரெசிபிகளை செய்யலாம்.
    • வாழைக்காய் சிப்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1

    உப்பு - தேவையான அளவு

    மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் மிளகுத் தூள்/மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் கலந்து வைத்த மிளகாய் தூளை சேர்த்து நன்றாக குலுக்கி எடுத்தால் வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 4,

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 டீஸ்பூன்

    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.

    நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - 150 கிராம்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    • சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது உருளைக்கிழங்கு சிப்ஸ்.
    • வீட்டிலேயே எளிய முறையில் இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 3 கிலோ,

    எண்ணெய் - ஒரு கிலோ,

    மிளகாய் பொடி - 5 தேக்கரண்டி,

    பெருங்காயம் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    உருளைக்கிழங்கின் மேல் தோலை சுரண்டி அல்லது மேலாக சீவி கழுவி வைத்து கொள்ளவேண்டும்.

    பின்னர் தோல் சீவிய கிழங்கை சிப்ஸ் சீவும் கட்டை மூலம் சீவி எடுத்து சுத்தமான ஒரு மென்மையான துணியில் ஈரம்போக ஒற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் இரும்பு சட்டியில் பொரித்து எடுக்கும் அளவில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.

    எண்ணெய் காய்ந்ததும் சீவிய கிழங்குகளை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    மிளகாய் தூள், மஞ்சள்பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை பொரித்து வைத்துள்ள சிப்ஸ் மீது தூவி நன்றாக கலந்து விட்டு ஆற விடவேண்டும்.

    சுமார் ஒரு மணி நேரம் கழித்ததும் பாலித்தீன் பைகளில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.

    கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
    எண்ணெய் - 150 கிராம்.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.

    அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.

    சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

    காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு: உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். அதிக நேரம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு கருத்து விடும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்..

    மாலையில் டீ, காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 20
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், சூப்பரான வெண்டைக்காய் சிப்ஸ் ரெடி!

    இந்த வெண்டைக்காய் சிப்ஸை தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுக்கலாம்
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால், வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலாக்காய் சிப்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம். இன்று வீட்டிலேயே பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பலாச்சுளை பழுக்காதவை - 10,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    பலாச்சுளையில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பலாக்காய் துண்டுகளை உதிர்த்தாற் போலப் போடுங்கள். நன்றாக வேகவிடுங்கள்.

    உப்பு கலந்த நீரில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றுங்கள். சத்தம் அடங்கியதும் பலாச்சுளைகளை எண்ணெய் வடித்து எடுங்கள்.

    இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்ப் பொடி தூவிக் கலந்தால் பலாக்காய் சிப்ஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    உப்பு - 1/2 டீஸ்பூன்
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 150 கிராம்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×