என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Software"
- வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
- சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .
அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.
சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.
இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.
மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என நம்பி உள்ளது.
- கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
- அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பழனி:
நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல்நாடு என்ற பெருமையும், நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன்மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தில் செற்கைகோள் மையத்தின் இயக்குனராக சங்கரன், திட்ட இயக்குனர் வீரமுத்து வேல் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும் சந்திரயான்-3 திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் நிலவில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் நிலவினை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை மிக முக்கியமானவையாகும். இவை மூன்றையும் பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலிகாமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்த கவுரிமணி (வயது50) என்பவர் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
10ம் வகுப்பு வரை பழனியில் உள்ள பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகளை திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப்பள்ளியிலும், தொலைதொடர்பு பொறியியலில் பி.இ., எம்.இ. பட்ட படிப்புகளை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது கணவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் இக்குழுவில் பணியாற்றிய பழனி பெண் விஞ்ஞானி கவுரிமணிக்கு அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
- ஜேப்படி ஆசாமிகள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரில் மத்திய பஸ் நிலையம், கோவில் வழி, புதிய பஸ் நிலையம் இயங்கி வருகின்றன. கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புது பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மத்திய பஸ் நிலையத்திலருந்து டவுன்பஸ்கள் மற்றும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றன. தினந்தோறும பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் எப்.ஆர்.எஸ் என்னும் சாப்ட்வேர் மூலம் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்:-
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் லட்சக்க ணக்கான தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வாரத்தில் சனி ஞாயிறுகளில் சம்பளம் அளித்து விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் சிலர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பஸ் மூலம் திருப்பூர் நகரத்துக்கு வருகிறார்கள். இது போன்ற நேரத்தில் ஜேப்படி ஆசாமிகள், செல்போன்கள் திருட்டு, நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர். மேலும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம்நகை பறிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபடுகிறோம். குற்றங்களை தடுக்கும் வகையில் சோதனையில் சிக்கக்கூடிய சந்தேக நபர்கள் ஏதாவது வேறு வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ள பழைய குற்றவாளி களை உடனே கண்டறியும் வகையில் எப்.ஆர்.எஸ். என்னும் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துணையுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் போட்டோ எடுத்தால் அவர்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் முழுமையான விவரமும் வந்துவிடும் . இதனால் எளிதாக குற்றவாளிகளை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.
- செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.
திருமங்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.
- எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ''ஆட்டோடெஸ்க் யூசன் 360'' என்ற மென்பொருள் வடிவமைப்பு தொடர்பாக பயிற்சி முகாமை கல்லூரியின் ஐ.சி.டி. அகாடமி நடத்தியது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் விஷ்ணுராம் வாழ்த்துரை வழங்கினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.
இந்த பயிற்சி முகாமை சென்னை ஐ.சி.டி.அகாடமி நிர்வாக அதிகாரி திவ்யபிரசாத் நடத்தினார்.
அவர் பேசுகையில், இந்த மென்பொருள் ஆட்டோ மெஷனில் உற்பத்திதுறை மற்றும் வடிவமைப்பு துறையின் பயன்பாடு பற்றியும், இதன் மூலமாக உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், எந்திரவியல் துறை பேராசிரியர்கள் முத்தையா, குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி நன்றி கூறினார்.
சென்னை கொளத்தூர், 8-வது தெருவை சேர்ந்தவர் பிரமோத் (வயது 38). அண்ணா நகரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாப்ட்வேர் நிறுவனத்தை மூடி விட்டு வெளியே வந்த பிரமோத், வீட்டுக்கு செல்வதற்காக அவருடைய காரில் ஏற முயன்றார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரமோத்தை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவர்கள் பிரமோத்தின் கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து காரின் பின் சீட்டில் தூக்கி போட்டுக்கொண்டு காரோடு அவரை கடத்திச் சென்றனர்.
இந்த கார் அம்பத்தூர் எஸ்டேட் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சமாளித்து அதனை நிறுத்திவிட்டார்.
பின்னர் அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளை காருக்கு குறுக்கே நிறுத்தி விட்டு, காரை ஓட்டி வந்தவரிடம் மோட்டார் சைக்கிளில் ஏன் இடித்தாய்? என்று கேட்டார். இதில் அவருக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரமோத் தனது காலால் காரின் கண்ணாடி மற்றும் கதவை பலமாக உதைத்தார். இதில் கார் குலுங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காருக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் காருக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பிரமோத்தை கடத்தி வந்ததை பொதுமக்கள் பார்த்துவிட்டதால் பதறிப்போன கடத்தல்காரர்கள் காரை விட்டு, விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற பொதுமக்கள் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேரும் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.
காரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பிரமோத்தை பொதுமக்கள் மீட்டனர். மடக்கிப்பிடித்த கடத்தல்காரரை அம்பத்தூர் எஸ்டேட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிரமோத் கடத்தப்பட்டது அண்ணா நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், பொதுமக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
அண்ணா நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அயனாவரத்தை சேர்ந்த ஜானகிராமன் (30) என்பதும், தப்பி ஓடியவர்கள் ஓட்டேரியை சேர்ந்த பிரான்சிஸ் (30), இம்ரான்செரீப் (32) மற்றும் பட்டாளத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற அப்பு (28) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் பிடிக்க அண்ணா நகர் போலீஸ் உதவி கமிஷனர் குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரமோத், சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதால் அவரிடம் அதிகம் பணம் இருக்கும் என்று எண்ணிய கடத்தல்காரர்கள் 4 பேரும் அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவரை கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களில் பிரான்சிஸ், பிரபாகரன் ஆகியோர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாபாணியில் நடந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்