search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை காய்கறி கஞ்சி
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை காய்கறி கஞ்சி

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    சாமை - அரை கப்

    பயத்தம் பருப்பு - அரை கப்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    கேரட், பீன்ஸ் - 1/4 கப்

    இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

    தேங்காய் பால் - 100 மில்லி

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

    தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க

    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை,

    கடுகு - சிறிதளவு

    செய்முறை:

    சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    பயத்தம் பருப்பை வறுத்து கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான சாமை காய்கறி கஞ்சி தயார்.

    Next Story
    ×