search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Pongal"

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    பாசிப்பருப்பு - ¼ கப்,
    தண்ணீர் - 2½ கப்,
    உப்பு - தேவைக்கு,
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சைமிளகாய் - 3,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். இரண்டும் வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு வெந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான சத்தான குதிரைவாலி காரப்பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவை வைத்து காரப் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - 50 கிராம் (8 மணி நேரம் ஊறவைக்கவும்),
    பச்சரிசி - 100 கிராம்,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    நெய் - 2 ஸ்பூன்,
    மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    இஞ்சி - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.



    செய்முறை :

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.

    வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானபொருள்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1ஸ்பூன்
    முந்திரி - சிறிதளவு
    நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

    சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் ஊறவைத்த சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.

    கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, ப.மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த அரிசி - பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

    சத்து நிறைந்த சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று அவலில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், நெய் - தேவைக்கு
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு- தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பாசிப்பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.

    மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

    பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    அவல் கார பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண் பொங்கல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று காய்கறிகள் சேர்த்து சத்தான ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப் பருப்பு - கால் கப்
    வெங்காயம் - 1
    பிடித்தமான காய்கறிகள் - 1 கப்
    பச்சை பட்டாணி - அரை கப்
    இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள், நெய் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    ஏலக்காய், பட்டை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    அரிசி, பருப்பை நீரில் கழுவி போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள்.

    ஓரளவு வெந்ததும் பெருங்காயத்தூள், நெய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பட்டை, மிளகு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    பின்னர் காய்கறிகளை கொட்டி, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்குங்கள்.

    காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

    ருசியான காய்கறி பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பொங்கலை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் புளிப்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உடைத்த அரிசி ரவை - 200 கிராம்
    புளி - 100 கிராம்
    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 100 மில்லி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    அரிசி ரவையை நன்றாக கழுவி வைக்கவும்.

    ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதில் புளியைக் கரைத்து வடிகட்டவும்.

    புளிக் கரைசலை அரிசி ரவையுடன் சேர்க்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ரவை கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

    விசில் போனவுடன் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான புளிப்பொங்கல் ரெடி.

    குறிப்பு: வடகம் வற்றல் இதற்கு சிறந்த காம்பினேஷன்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானபொருள்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1ஸ்பூன்
    முந்திரி - சிறிதளவு
    நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

    சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் ஊறவைத்த சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.

    கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, ப.மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த அரிசி - பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

    சத்து நிறைந்த சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கோதுமை ரவை, சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த பொங்கலை செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - அரை கப்,
    பாசிபருப்பு - அரை கப்,
    வரகு, தினை - அரை கப்,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - கால் தேக்கரண்டி,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து சுடுநீர் ஊற்றி வேகவிடவும்.

    பாசி பருப்பை மலர வேக வைத்து கொள்ளவும்.

    சிறுதானியத்தை நன்றாக கழுவி வேக விடவும்.

    சிறுதானியங்கள் நன்றாக வெந்தவுடன் அதில் வெந்த பாசிப்பருப்பு, கோதுமை ரவை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதை வெந்த பொங்கலில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இப்போது சூப்பரான கோதுமை ரவை - சிறுதானிய பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவையில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று ரவையில் எப்படி பொங்கல் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ரவை - 2 கப்
    பச்சைப் பருப்பு - அரை கப்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை



    செய்முறை :

    முதலில் முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

    அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

    மீண்டும் வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்து, ஒரு கப் ரவைக்கு இரண்டே கால் கப் தண்ணீர் என ஊற்றி கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

    தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவை முழுவதையும் சேர்த்த பிறகு, நன்றாகக் கிளறிவிட்டு 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும். நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும்.

    தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×