என் மலர்
நீங்கள் தேடியது "Horsegram Recipes"
- உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
- கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துண்டுகள் - 1 கப்
புளி - 10 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் கொள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, சிறிதளவு உளுந்து, காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
வறுத்து வைத்திருக்கும் கலவையை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய்த் துண்டுகள், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.

நீங்கள் உண்ணும் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதால் எடை இழப்பு ஏற்படும்.
கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும்.
கொள்ளு துவையலாக மட்டுமில்லாமல், கொள்ளை வேகவைத்து சுண்டலாகவும், கொள்ளு தோசை, கொள்ளு சூப், கொள்ளு ரசம் முதலானவற்றை செய்து சாப்பிடலாம்.
கொள்ளு - 50 கிராம் (8 மணி நேரம் ஊறவைக்கவும்),
பச்சரிசி - 100 கிராம்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
நெய் - 2 ஸ்பூன்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை :
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.
வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
கொள்ளு - கால் கப்,
புளி - நெல்லியளவு,
தக்காளி - 2,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
பூண்டு - 6,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கடுகு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் கொள்ளை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.






