என் மலர்
நீங்கள் தேடியது "Kollu"
- உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
- கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துண்டுகள் - 1 கப்
புளி - 10 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் கொள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, சிறிதளவு உளுந்து, காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
வறுத்து வைத்திருக்கும் கலவையை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய்த் துண்டுகள், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.

நீங்கள் உண்ணும் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதால் எடை இழப்பு ஏற்படும்.
கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும்.
கொள்ளு துவையலாக மட்டுமில்லாமல், கொள்ளை வேகவைத்து சுண்டலாகவும், கொள்ளு தோசை, கொள்ளு சூப், கொள்ளு ரசம் முதலானவற்றை செய்து சாப்பிடலாம்.
- கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான்.
- கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான்.
கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான். அதிலும் கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையானபொருட்கள்:
முளை விட்ட கொள்ளு - 200 கிராம்,
கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்),
பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்),
நறுக்கிய புதினா கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப),
நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கேற்ப
சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு,
எண்ணெய் - கால் கிலோ.
செய்முறை:
கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்க வேண்டும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைக்க வேண்டும். கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித் தெடுக்கவும்.






