search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollu"

    • கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான்.
    • கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான்.

    கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான். அதிலும் கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

    தேவையானபொருட்கள்:

    முளை விட்ட கொள்ளு - 200 கிராம்,

    கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்),

    பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்),

    நறுக்கிய புதினா கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,

    பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப),

    நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    உப்பு- தேவைக்கேற்ப

    சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு,

    எண்ணெய் - கால் கிலோ.

    செய்முறை:

    கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்க வேண்டும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைக்க வேண்டும். கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித் தெடுக்கவும்.

    ×