search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetable Recipes"

    தோசை, இட்லி, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெள்ளை காய்கறி குருமா. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 3
    உருளைக்கிழங்கு - 2
    பீன்ஸ் - 50கிராம்
    கேரட் - 50கிராம்
    பட்டாணி - 50கிராம்
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய்துருவல் - கால்மூடி
    கசகசா - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    சோம்பு - 1  ஸ்பூன்
    முந்திரி பருப்பு  - 5
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1  ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்  - 5 ஸ்பூன்

    தாளிக்க

    கிராம்பு
    பட்டை
    ஏலக்காய்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

    காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து   நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதோ சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண் பொங்கல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று காய்கறிகள் சேர்த்து சத்தான ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப் பருப்பு - கால் கப்
    வெங்காயம் - 1
    பிடித்தமான காய்கறிகள் - 1 கப்
    பச்சை பட்டாணி - அரை கப்
    இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள், நெய் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    ஏலக்காய், பட்டை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    அரிசி, பருப்பை நீரில் கழுவி போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள்.

    ஓரளவு வெந்ததும் பெருங்காயத்தூள், நெய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பட்டை, மிளகு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    பின்னர் காய்கறிகளை கொட்டி, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்குங்கள்.

    காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

    ருசியான காய்கறி பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×