search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samai Recipes"

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாமை அரிசியுடன் காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியத்தையும் அளிக்கும் சாதம் செய்தால் சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 2 கப்
    பீன்ஸ், கேரட், அவரை - 1 கப்
    பச்சை பட்டாணி - கால் கப்
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    ப.மிளகாய் - 4
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
    உப்பு - சுவைக்கு



    செய்முறை :

    சாமை அரிசியில் நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 மணிநேரம் ஊற விடவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அதோடு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய்கறிகளை வேக விடவும்.

    காய்கறிகள்  வெந்தவுடன் அதில் ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    மீண்டும் மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாமை காய்கறி சாதம் ரெடி.

    உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி பலகாரங்களில் இனிப்பு கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு சாமை அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 3 கப்
    துருவிய வெல்லம் - 3 கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    சாமை அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வடிகட்டி நிழலில் உலறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும்.

    ஏலக்காய் தூளும் சேர்த்துக்கொள்ளவும்.

    இந்த மாவு கலவையை 2 நாட்கள் அப்படியே வைத்துவிடுங்கள்.

    பின்பு அந்த மாவை அதிரசமாக தட்டி வைக்கவும்.

    தட்டி வைத்த மாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து நன்றாக எண்ணெயை வடித்து ருசிக்கவும்.

    சூப்பரான சாமை அதிரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×