search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HomeMade Snacks"

    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட், கோவா சேர்த்து வீட்டிலேயே சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 200 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    பொடித்த கோவா - 1/2 கப்,
    சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
    மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
    உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும். ‘

    கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 10 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும்.

    ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சுசியம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    வெல்லம் / பனை வெல்லம் - 1 கப்
    கடலைபருப்பு - 1 கப்
    துருவிய தேங்காய் - 1 கப்
    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
    நெய் - 1 தேக்கரண்டி



    செய்முறை:

    கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் வேக வைத்த கடலை பருப்பு, வடிகட்டிய வெல்லப் பாகு, துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.

    அது கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வைக்கவும்.

    பின்னர் அவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான சுசியம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஜிலேபி மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிலேபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம் பருப்பு - 250 கிராம்
    அரிசி - 30 கிராம்
    சர்க்கரை - 1 கிலோ
    லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ்
    டால்டா, நெய், அல்லது ரீபைண்ட் ஆயில்



    செய்முறை :

    அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். சீனிபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான தணலில் வைக்கவும்.

    அதே நேரம் உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்..

    வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.

    நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.

    சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.

    ஜாங்கிரி பிழியும் ரெட்டில் இல்லாதவர்கள் கனமான கைக்குட்டை போன்ற துணியால் சுண்டு விரல் நுழையக் கூடிய அளவு ஒரு சின்ன ஓட்டைப் போட்டு அதில் ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைத்து கை முறுக்கு பிழிவது போன்றும் பிழியலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹாட் சாக்லேட்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
    இலவங்கப்பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கேற்ப
    உருகிய சாக்லேட்  - 2 டீஸ்பூன்
    துருவிய சாக்லேட் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் பால் ஊற்றி சர்க்கரை போட்டு கரையும் வரை கிளறி விடவும்.

    ஒரு கிளாஸில் கோகோ, உருகிய சாக்லேட் சேர்த்து நன்கு கலக்கவும்.

    1 டீஸ்பூன் சூடான பாலை சாக்லேட்டில் கலந்து நன்கு ஸ்மூத்தாக கலந்து விடவும். அதன் மேலாக நுரை வர பாலை காய்ச்சி அதில் ஊற்ற வேண்டும்.

    இறுதியாக, இலவங்கப்பட்டை பவுடர், துருவிய சாக்லேட் போட்டு சூடான ஹாட் சாக்லேட்டை பரிமாறவும்..

    சூடான ஹாட் சாக்லேட் ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு எப்படி குணுக்கு செய்வதென்று பார்க்கலாம். அதைப் படித்து, மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    இட்லி மாவு - 2 பெரிய கப்
    மைதா - 4 டேபிள் ஸ்பூன்
    சமையல் சோடா - 1 சிட்டிகை
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    கறிவேப்பிலை - சிறிது
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், குணுக்கு ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட பிரெட் மெதுவடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10
    ரவை - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் மெதுவடை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலா ஜாமூன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் காலா ஜாமூனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இனிப்பில்லாத கோவா -  1/4 கிலோ,
    சர்க்கரை - 750 கிராம்,
    மைதா - 60 கிராம்,
    ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
    ஏலக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்,
    ஜாதிக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :
     
    சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க  வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.

    வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

    சூப்பரான காலா ஜாமூன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான டோஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவிற்கு...


    மைதா - அரை கப்,
    ஓமம் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    தண்ணீர் - தேவைக்கு.

    பூரணத்திற்கு...

    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,
    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    கடலை மாவு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்  தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3  பாகங்களாக கீறி விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஜெல்லி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜெல்லி பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இளநீர் - ஒரு கப்
    அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) (agar agar kadal pasi) - ஒரு டீஸ்பூன்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    தேங்காய்ப் பால் - ஒரு கப்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள்.

    ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை கைவிடாமல் கிளறுங்கள்.

    கண்ணாடி போல் கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள்.

    இதேபோல் தேங்காய்ப் பாலில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொஞ்சம் கொட்டியானதும் முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.

    அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும்.

    பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

    சூப்பரான ஜெல்லி பர்பி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேப்பர் கப் - தேவைக்கேற்ப (5 To 6),
    உப்பு - 1/4 டீஸ்பூன்,
    கோதுமை மாவு - 150 கிராம்,
    நாட்டு சர்க்கரை - 100 கிராம்(Brown Sugar),
    வாழைப்பழம் - 2 (பெரியது பழுத்தது),
    வெண்ணெய் - 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
    வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப (1 or 1 1/2),
    முட்டை: 1 (பெரியது) .



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

    பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.

    பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

    பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.

    பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ரவா பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது டிபனாக செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவா - 2 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    அரிசிமாவு - 1/4 கப்
    வெங்காயம் - 2
    பச்சைமிளகாய்-  4
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை, கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
    பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..

    அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.

    பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

    சூப்பரான ரவா பக்கோடா ரெடி.

    பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் அதை வைத்து சுவையான போண்டா செய்யலாம். இன்று இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    இட்லி - 5
    கடலைமாவு - 4 மேஜைக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - சிறிதளவு
    தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
    பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    இட்லிகளை உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு செய்து வைத்த உருண்டைகளை போடவும்.

    ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான இட்லி போண்டா ரெடி.

    குறிப்பு  :

    மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். ஐந்து இட்லிக்கு 20 போண்டாக்கள் வரை வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×