search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiffin"

    பல்வேறு வகையான பொங்கலை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் புளிப்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உடைத்த அரிசி ரவை - 200 கிராம்
    புளி - 100 கிராம்
    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 100 மில்லி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    அரிசி ரவையை நன்றாக கழுவி வைக்கவும்.

    ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதில் புளியைக் கரைத்து வடிகட்டவும்.

    புளிக் கரைசலை அரிசி ரவையுடன் சேர்க்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ரவை கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

    விசில் போனவுடன் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான புளிப்பொங்கல் ரெடி.

    குறிப்பு: வடகம் வற்றல் இதற்கு சிறந்த காம்பினேஷன்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இடியாப்பம் மீந்து போனால் மாலையில் அதை வைத்து சூப்பரான புலாவ் செய்யலாம். இன்று இடியாப்ப புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்பம் - 6,
    வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1,
    பட்டை - ஒரு சிறிய துண்டு,
    கீறிய பச்சை மிளகாய் - 2,
    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம், உப்பு சேர்த்து கிளறவும்.

    மசாலா அனைத்து இடியாப்பத்தில் சேர்ந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்ப புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடலைப்பருப்பு ஸ்டஃப்டு வைத்து எளிய முறையில் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 100 கிராம்  
    பச்சை மிளகாய் - 3  
    மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்  
    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கோதுமை மாவு - 200 கிராம்  
    நெய் அல்லது வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.

    வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

    பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும்.

    தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.ங

    சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×