search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veg Recipe"

    • இது நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • மஷ்ரூம் சுக்காவின் சுவை மட்டன் சுவைக்கு நிகராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மஷ்ரூம் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    சோம்பு - 1 ஸ்பூன்

    மிளகு - 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    தனியா - 1 ஸ்பூன்

    வர மிளகாய் - 3

    பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    கறிவேப்பில்லை - 2 கொத்து

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    மஷ்ரூமை அலசி விட்டு ஒரே மாதிரியான அளவில் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயில் மஷ்ரூமைகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மஷ்ரூம்களில் இருக்கும் அதிக தண்ணீரை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானவுடன் ( வெறும் கடாயில்) மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, தனியா, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு மிக்சிஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதில் சிறிது வெங்காயமும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

    மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு, வேக வைத்த மஷ்ரூம்களை சேர்த்து வதக்கி விட்டு, உப்பு தூவி நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.

    கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து , கலவை சுண்டி வரும் வரை வதக்கி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தூவு பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுபலம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    சீரகம் - அரை டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 4

    துருவிய கேரட் - 2 டீஸ்பூன்

    குடைமிளகாய் -2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    கொத்தமல்லி தழை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    ப.மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பிசைத்து வைத்த மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.

    தேய்த்த மாவில் நடுவில் மசாலாவை வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும். அதன் மேல் மற்றொரு சப்பாதியால் மூடி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும்.

    இப்போது சப்பாத்தியின் 4 ஓரங்களையும் வெட்டி (சதுர வடிவில்) விடவும். அடுத்து கத்தியால் கைவிரல் அகலத்தில் துண்டுகளாக வெட்டவும்.

    வெட்டிய ஒரு துண்டின் நடுவில் நீளமான குச்சியால் நடுவில் அழுத்தினால் இருபக்க ஒரங்களிலும் விரிந்து வரும்.

    இப்போது அதை இருபக்க முனைகளையும் பிடித்து வெவ்வோறு கோணத்தில் முறுக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்ததை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு டிவிஸ்டர் சமோசா ரெடி.

    • இந்த சமோசா செய்வது மிகவும் சுலபம்.
    • குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 3 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி தழை- 1/2 கப்

    எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    சிறிதளவு மைதாவை தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய் தூள், சீரக பொடி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.

    பிசைந்து வைத்த மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி அதை முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி ஓரங்களில் மைதா பசையை தடவி மூடிவிடவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சுவையான வெங்காய சமோசா ரெடி.

    காலை, மாலை நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்,
    பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 5,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கு.

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை:

    சேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து கொள்ளவும்.  

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீதமுள்ள நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொண்டைக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய கொண்டைக்கடலை (கருப்பு) - ஒரு கப்
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த கொண்டைக்கடலையில் சிறிதளவு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கியதும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரைத்த கொண்டைக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்துவைத்த கொண்டைக்கடலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பருகவும்.

    குறிப்பு: இந்த சூப், வளரும் குழந்தைகளுக்கு நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடலைப்பருப்பு ஸ்டஃப்டு வைத்து எளிய முறையில் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 100 கிராம்  
    பச்சை மிளகாய் - 3  
    மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்  
    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கோதுமை மாவு - 200 கிராம்  
    நெய் அல்லது வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.

    வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

    பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும்.

    தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.ங

    சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×