என் மலர்
நீங்கள் தேடியது "Mushroom Recipes"
- காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
- காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது.
தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு :
வர மிளகாய் - 4
தனியா - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )
தாளிப்பதற்க்கு :
எண்ணெய் - தேவையான அளவு
பிரியாணி இலை - 1
பட்டை - 1/2 அளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 2 கொத்து
செய்முறை :
* சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
* சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
* இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.
* காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.
* குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
* காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.
* இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.
குறிப்பு : இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.
காளான் - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
அரைப்பதற்கு...
வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:
காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காளான் கிரேவி ரெடி!!!
நறுக்கிய காளான் - அரை கப்
கடலைப் பருப்பு - அரை கப்
ரொட்டித்தூள் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
ஸ்வீட் கார்ன் - கால் கப்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கு
கசகசா, சீரகம் - தேவைக்கு
ஏலக்காய், கிராம்பு - 4
பெ.வெங்காயம் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லி தட்டில் ஸ்வீட் கார்னை வேக வைத்துக்கொள்ளவும்.
கடலை பருப்பையும் குக்கரில் வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியை மிதமான சூட்டில் வைத்து சீரகம், கசகசாவை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அதுபோல் கடலை பருப்பு, காளான், சுவீட் கார்ன் போன்றவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் காளானை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த மசாலா கலவை, சோளமாவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இந்த கலவைகளை உருண்டைகளாக உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான காளான் கபாப் ரெடி.
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
காளான் - 250 கிராம்
வெங்காயம் - 1
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
காளானை நன்றாக நீரில் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
அடுத்து உப்பு, காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, குறைவான தீயில் காளானை வேக வைக்க வேண்டும்.
பாஸ்தா - 150 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 6 பற்கள்
மொசரெல்லா சீஸ் - ¼ கப் (Mozzarella cheese)
கோதுமை / மைதா - 2 மேஜைக்கரண்டி
பால் - 1 கப்
காய்ந்த துளசி - 1 தேக்கரண்டி
காளான் - 200 கிராம்
காய்ந்த ஆர்கனோ - 1 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
பட்டர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.
கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளான் - 250 கிராம்
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1
குடை மிளகாய் - பாதி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை :
வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்,
கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பூண்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கினால் போதுமானது.
அடுத்து அதில் மஞ்சள் தூள், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காளான், உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. இதிலேயே தண்ணீர் இருக்கும்.
காளான் வெந்தவுடன் அதில் மிளகு தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காளான் மிளகு மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டன் காளான்கள் - 20
இஞ்சி, பூண்டு - சிறிதளவு,
வெங்காயத்தாள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சாதம் - 4 கப் ( உதிரியாக வடித்து ஆறவைத்தது)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
பட்டன் காளானை நீரில் சுத்தப்படுத்தி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து, சிறிது நேரம் வதக்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சிறிதளவு உப்பு, சோயா சாஸ் சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும்.
கடைசியாக மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து வாணலி சூட்டிலேயே கலந்து இறக்கினால் சூடான சுவையான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டன் காளான் - 15
வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பசலைக்கீரை பேஸ்ட் பொருட்கள்...
பசலைக் கீரை - 1 கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
பட்டை - 1
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
கொத்தமல்லி - ஒரு கட்டு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பசலைக்கீரை பேஸ்ட்டிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.