search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veriety Rice"

    பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 2 கப்
    பெரிய வெங்காயம் - 2
    கேரட் - 2
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    காலிஃப்ளவர் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி, புதினா தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 2 கப்
    பட்டை - 1 அங்குலம்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - சிறிது
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை  :

    அரிசியை கழுவி, 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயத்தை நீளமாக, நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸை சமமான துண்களாக வெட்டிக்கொள்ளவும்.

    காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்கவும்.

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை  போனவுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து லேசாக கிளறவும். நன்றாக வதக்கினால் கலர் மாறிவிடும் எனவே வதக்கவேண்டாம்.

    இதனுடன் அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.

    மூடி போட்டு விசில் போடாமல் அடுப்பை வேகமாக எரிய விடவும். தண்ணீர் கொதித்து வரும் போது லேசாக திறந்து உப்பு போட்டு கலக்கவும்.

    பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    10 நிமிடம் கழித்து மூடியை திறக்கவும்.

    சுவையான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    சாதம் உடையாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் கொத்தமல்லி, புதினா இலைகளை தூவி அலங்கரிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்,
    தக்காளி - 4
    பச்சை மிளகாய் -2,  
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பிரெட் ஸ்லைஸ் - 2,
    முந்திரித் துண்டுகள் - 6,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    2 தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுக்கவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் 2 தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் வறுத்த முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.

    கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

    இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சமையல் செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக காளான் மிளகு சாதம் செய்து சுவைக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
    காளான் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்றாக நீரில் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து உப்பு, காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, குறைவான தீயில் காளானை வேக வைக்க வேண்டும்.

    காளானானது நன்கு வெந்ததும், அதில் சாதத்தைப் போட்டு, மசாலா சாதத்தில் நன்கு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான காளான் மிளகு சாதம் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×