search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushroom Pepper Rice"

    • செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.
    • காளான் மிளகு சாதத்தை முயற்சி செய்துபாருங்கள்

    தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சமையல் செய்து போர் அடித்திருந்தால், இந்த காளான் மிளகு சாதத்தை முயற்சி செய்யுங்கள். இன்னும் சூப்பராக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    காளான்- ஒருகப்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை- சிறிதளவு

    பச்சைமிளகாய்- 4

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    தனியா தூள்- ஒரு ஸ்பூன்

    கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    செய்முறை

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் ஒரு குழிக்கர்ண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சிபூண்டு விழுந்து சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்க வேண்டும்.

    அதன்பிறகு மஞ்சள்தூள், காளான், தனியா தூள், கரம்மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும் மசாலா பச்சை வாசனை போனபிறகு அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்துள்ள சாதத்தினை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். காளான் மசாலாவுடன் சாதம் ஒன்றாக கலந்து வரும் வரை கிளற வேண்டும். இறக்கும் போது கொத்தமல்லி தலை போட்டு இறக்க வேண்டும்.

    தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சமையல் செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக காளான் மிளகு சாதம் செய்து சுவைக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
    காளான் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்றாக நீரில் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து உப்பு, காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, குறைவான தீயில் காளானை வேக வைக்க வேண்டும்.

    காளானானது நன்கு வெந்ததும், அதில் சாதத்தைப் போட்டு, மசாலா சாதத்தில் நன்கு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான காளான் மிளகு சாதம் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×