search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    செட்டிநாடு ஸ்டைல் காளான் குருமா
    X

    செட்டிநாடு ஸ்டைல் காளான் குருமா

    • காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
    • காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது.

    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

    தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு :

    வர மிளகாய் - 4

    தனியா - 1 தேக்கரண்டி

    மிளகு - 1/2 தேக்கரண்டி

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி

    துருவிய தேங்காய் - 1 கைப்பிடி

    கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )

    தாளிப்பதற்க்கு :

    எண்ணெய் - தேவையான அளவு

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1/2 அளவு

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 1

    சோம்பு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பில்லை - 2 கொத்து

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.

    * சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.

    * காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.

    * குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

    * காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.

    * இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.

    குறிப்பு : இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.

    Next Story
    ×