search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Curry"

    சூடான சாதம், தோசையுடன் சாப்பிட வெண்டைக்காய் குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    காய்ந்த மிளகாய் - 2,
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    தக்காளி - 1,
    குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு,
    நல்லெண்ணெய் - தேவைக்கு,
    வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு வதக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி மசிய வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    அடுத்து வதக்கிய வெண்டைக்காயை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று வெந்தயக்கீரையை சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு,
    துவரம்பருப்பு - ஒரு கப்,
    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    துவரம்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.

    வாணலியில் கரைத்த புளியை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

    அடுத்து அதில் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான வெந்தயக்கீரை சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட்டில் பொரியல், கூட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட்டில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 1,
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு, கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

    நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.

    சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவ உணவுக்கு ஈடான சுவையை தரும் காளானுடன் சத்துக்கள் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 15
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பசலைக்கீரை பேஸ்ட் பொருட்கள்...

    பசலைக் கீரை - 1 கட்டு
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 4
    பட்டை - 1
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 4
    அன்னாசிப்பூ - 1
    கொத்தமல்லி - ஒரு கட்டு



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பசலைக்கீரை பேஸ்ட்டிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×