search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasta"

    வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி - 1 கப்
    ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
    பூண்டு பற்கள் - 5
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    காளான் - 10
    பசலைக்கீரை - 1 கட்டு
    டையட் மயோனிஸ் - 5 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை

    பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். 5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது அடியில் மக்ரோனி தாங்காமல் இருக்க கிளறி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.  

    வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120 மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். இதனை பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி  சூடானதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

    கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும். 1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    இப்போது கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பாஸ்தா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து எளிய முறையில் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - 150 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 6 பற்கள்
    மொசரெல்லா சீஸ் - ¼ கப் (Mozzarella cheese)
    கோதுமை / மைதா - 2 மேஜைக்கரண்டி
    பால் - 1 கப்
    காய்ந்த துளசி - 1 தேக்கரண்டி
    காளான் - 200 கிராம்
    காய்ந்த ஆர்கனோ - 1 தேக்கரண்டி
    நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
    பட்டர் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்தா - 1 கப்
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - ஒன்று
    குடைமிளகாய் - 1/4 பாகம்
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.

    முட்டை உதிரியாக வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தா சேர்த்து சுருள கிளறி விட்டு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான சுவையான முட்டை பாஸ்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாஸ்தாவை சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.
    'பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.

    பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மைகொண்டது. இது, பெரும்பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல.



    நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்த்து, கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி போன்ற முழுதானிய மாவில் இருந்தும் பாஸ்தா தயாரிக்கப்படுகிறது. எந்த மாவில் இருந்து பாஸ்தா தயாரிக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்து சத்துக்கள் மாறுபடும். முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்தாவாக இருந்தால், அதில் வைட்டமின்கள், மக்னீஷியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தாது உப்புக்கள், நார்ச் சத்து போன்றவை இயற்கையாகவே இருக்கும்.

    கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது. இதைச் சாப்பிடும்போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது.



    இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும்போது, அதன் பலன்களும் கூடும். எனவே, கடைசியில் பாஸ்தா வாங்கும்போது அது முழு தானியங்களால் தயாரிக்கப்பட்டதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.

    * இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

    * செரிமானம் குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

    * சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்த்து, பாஸ்தாவுக்குப் பதில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது'

    'நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வதுபோன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம். சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.'
    ×