search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "variety recipes"

    சேமியா சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு பழங்கள் போட்டு தயிர் சேமியா செய்து கொத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 200 கிராம்
    தயிர் - ஒரு கப்,  
    மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - அரை டீஸ்பூன்.

    தாளிக்க :

    மிளகு - 10,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை,
    காய்ந்த மிளகாய் (கிள்ளியது) - 2



    செய்முறை :

    சேமியாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.

    இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு உருகியதும், தாளிக்கும் பொருட்களை சேர்தது தாளித்து சேமியா கலவையுடன் சேர்க்கவும்.

    பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான தயிர் சேமியா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் கொண்டைக்கடலை புலாவ் செய்வது கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5,
    பச்சை மிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பட்டை - சிறு துண்டு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    வெள்ளை கொண்டைக்கடலை - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து கொள்ளவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.

    அடிகனமான வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பின்பு பரிமாறவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 100 கிராம்
    வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
    சின்ன வெங்காயம் - 5
    தக்காளி - ஒன்று
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் -  ஒரு டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
    கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
    பூண்டுப் பல் - ஒன்று
    நெய் (அ) நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள்  - அரைக்கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

    குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.

    பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்தா - 1 கப்
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - ஒன்று
    குடைமிளகாய் - 1/4 பாகம்
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.

    முட்டை உதிரியாக வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தா சேர்த்து சுருள கிளறி விட்டு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான சுவையான முட்டை பாஸ்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×