search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு"

    • அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
    • சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூரில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 34 மாணவர்கள் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    நேற்று இரவு விடுதியில் 20 மாணவர்கள் மட்டும் இருந்தனர். விடுதியில் மாணவர்களுக்கு நேற்று இரவு 8.30 மணியளவில் சாப்பாடு, ரசம் மற்றும் முட்டை ஆகியவை உணவாக வழங்கப்பட்டது.

    இதில் விடுதியில் உள்ள திருப்பூர் உடுமலையை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சபரீஸ் (வயது 12), ஆனைமலை கரியன்செட்டிப் பாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் முத்துகணேஷ் (12), மீனாட்சிபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் (15), வால்பாறையை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் முனீஸ் (16), பொள்ளாச்சி காளிபாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சிவபிரசாந்த் (12) ஆகிய 5 மாணவர்கள் மதியம் மீதி இருந்த பாசிப்பருப்பு குழம்பை எடுத்து சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் 5 மாணவர்களுக்கும் வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து 5 மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக மயங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் மாணவர்களை பரிசோதனை செய்தபோது கெட்டுபோன உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து டாக்டர்கள் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோஷ்டியூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து ரூ. 1 லட்சம் உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கலப்படமான டீத்தூள், கலர் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள், குட்கா உள்ளிட்டவைகளை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. 

     இதனையடுத்து  திருக்கோஷ்டியூர் பகுதிகளில் உள்ள மளிகை கடை, உணவகங்கள், பெட்டிக்கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. 

    அப்போது  ரூ.1 லட்சம் மதிப்பிலான விற்பனை செய்யப்பட்ட உணவு பொருட்கள், கலப்பட டீ தூள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு   பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதில் சுமார் 100 கிலோ டீத்தூள், 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பெட்டிக்கடையில் பான்ம சாலா விற்கப்பட்டதையும் கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு அலுவலர்  அவற்றையும் பறிமுதல் செய்தார். மேலும்  மளிகை கடைக்காரர் மற்றும் அந்த பகுதி மக்கள் மத்தியில் போலி டீத்தூளை கண்டுபிடிக்கும் முறையினை செய்து காண்பித்தார். 

    இந்த நிகழ்வின் போது உணவு பாதுகாப்புதுறை உதவியாளர்கள் மாணிக்கம், மன்சூர், ஆரிப் ஆகியோர்   இருந்தனர்.

    ×