என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கோஷ்டியூர்"

    • வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நாடு வடக்கு தெரு சேகரம் வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயினார் பட்டி கிராமத்தில் உள்ளது வீரய்யா சுவாமி பட்டவர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது. தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்து தீபாராதனை, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியாத்தூர், வாணியம்பட்டி ,பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், யகருங்குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயா அப்புச்சி வகையறா பங்காளிகள், நயினார் பட்டி கிராமத்தார்கள் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருக்கோஷ்டியூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து ரூ. 1 லட்சம் உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கலப்படமான டீத்தூள், கலர் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள், குட்கா உள்ளிட்டவைகளை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. 

     இதனையடுத்து  திருக்கோஷ்டியூர் பகுதிகளில் உள்ள மளிகை கடை, உணவகங்கள், பெட்டிக்கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. 

    அப்போது  ரூ.1 லட்சம் மதிப்பிலான விற்பனை செய்யப்பட்ட உணவு பொருட்கள், கலப்பட டீ தூள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு   பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதில் சுமார் 100 கிலோ டீத்தூள், 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பெட்டிக்கடையில் பான்ம சாலா விற்கப்பட்டதையும் கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு அலுவலர்  அவற்றையும் பறிமுதல் செய்தார். மேலும்  மளிகை கடைக்காரர் மற்றும் அந்த பகுதி மக்கள் மத்தியில் போலி டீத்தூளை கண்டுபிடிக்கும் முறையினை செய்து காண்பித்தார். 

    இந்த நிகழ்வின் போது உணவு பாதுகாப்புதுறை உதவியாளர்கள் மாணிக்கம், மன்சூர், ஆரிப் ஆகியோர்   இருந்தனர்.

    ×