search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushroom Gravy"

    • சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் பிரை.
    • ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா?

    காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ஃப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மிளகு – ஒன்றரை ஸ்பூன்

    சீரகம் – 1 ஸ்பூன்

    சோம்பு – 1 ஸ்பூன்

    மல்லித் தூள் – அரை ஸ்பூன்

    தாளிக்க தேவையான பொருட்கள்

    நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு – அரை ஸ்பூன்

    உளுந்து – அரை ஸ்பூன்

    பூண்டு – 10 பல்

    பச்சை மிளகாய் – 1

    கறிவேப்பிலை – சிறிதளவு

    பெரிய வெங்காயம் – 2

    இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

    காளான் – 200 கிராம்

    உப்பு – தேவையான அளவு

    மல்லித் தழை – சிறிதளவு

    செய்முறை

    மிளகு, சீரகம், சோம்பு மசாலா பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுந்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன், மஞ்சள் தூள், காளான், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக தயார் செய்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மூடிவைத்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். தேவைப்பட்டால் வறுத்த முந்திரிகளை கூட சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான காளான் பெப்பர் ஃப்ரை ரெசிபி ரெடி.

    சப்பாத்தி, நாண், தோசை, சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் கிரேவி. இன்று இந்த காளான் கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான் - 200 கிராம்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைப்பதற்கு...

    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    பட்டை - 1 இன்ச்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 1
    கிராம்பு - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 2 சிட்டிகை



    செய்முறை:

    காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.

    பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான காளான் கிரேவி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×