search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushroom Recipe"

    • நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும்.
    • பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    காளான் கிரேவி கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக சேர்த்து இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள பரோட்டா சைட் டிஷ் இது. உங்களுடைய குழந்தைகளுக்கு, இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். ரொம்ப ரொம்ப சுலபமாக மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?

    தேவையான பொருட்கள்:

    காளான் – 1 பாக்கெட்

    நறுக்கிய வெங்காயம் – 1

    நறுக்கிய தக்காளி – 1

    கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்

    கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

    மிளகு – 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் – 3

    கடுகு, சீரகம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை

    கடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    பின்னர் காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா பொடி கலவையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்போது தண்ணீர் விட்டு மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்.

    • அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையை தரக்கூடியது காளான்.
    • காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

    சைவ உணவுகளிலேயே அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைத் தரக்கூடியது தான் காளான். அத்தகைய காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காளானை அதிகம் சாப்பிடுவது நல்லது. அத்தகைய காளானுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் குழம்பானது இருக்கும். இப்போது பசலைக்கீரை காளான் குழம்பின் செய்முறையை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 15

    வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 1/2 கப்

    அரைப்பதற்கு

    பசலைக் கீரை - 1 கட்டு (கழுவி நறுக்கியது)

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    பட்டை - 1

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 4

    அன்னாசிப்பூ - 1

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, தட்டு கொண்டு மூடி 7-8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி.

    • சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் பிரை.
    • ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா?

    காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ஃப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மிளகு – ஒன்றரை ஸ்பூன்

    சீரகம் – 1 ஸ்பூன்

    சோம்பு – 1 ஸ்பூன்

    மல்லித் தூள் – அரை ஸ்பூன்

    தாளிக்க தேவையான பொருட்கள்

    நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு – அரை ஸ்பூன்

    உளுந்து – அரை ஸ்பூன்

    பூண்டு – 10 பல்

    பச்சை மிளகாய் – 1

    கறிவேப்பிலை – சிறிதளவு

    பெரிய வெங்காயம் – 2

    இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

    காளான் – 200 கிராம்

    உப்பு – தேவையான அளவு

    மல்லித் தழை – சிறிதளவு

    செய்முறை

    மிளகு, சீரகம், சோம்பு மசாலா பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுந்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன், மஞ்சள் தூள், காளான், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக தயார் செய்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மூடிவைத்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். தேவைப்பட்டால் வறுத்த முந்திரிகளை கூட சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான காளான் பெப்பர் ஃப்ரை ரெசிபி ரெடி.

    ×