search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Snacks"

    சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு ஆரோக்கியமானது. இந்த சத்து மாவு உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சத்து மாவு - 1 கப்
    வெல்லம்/கருப்பட்டி - 1/3 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை



    செய்முறை:

    சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    பாகை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி. இன்று இந்த பர்ஃபியை எளிய முறையில் செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - 100 கிராம்,
    அத்திப்பழம் - 1,
    கிஸ்மிஸ் - ஒரு கைப்பிடி,
    பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் - தலா ஒரு கைப்பிடி,
    நெய் - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை.



    செய்முறை :

    மிக்ஸியில் பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட்டை கொரகொரப்பாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும்.

    இதில் அத்திப்பழம் பேரீச்சை, கிஸ்மிஸ் ஆகியவற்றை சுத்தம் செய்து மிக்ஸியில் மசித்துப் போடவும்.

    ஏலக்காய் தூளும் நெய்யும் கலந்து நன்கு உருட்டி பர்ஃபிகளாகத் தட்டிப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் உலர்ந்த பழங்களை எடுத்து கொள்வது நல்லது. இன்று உலர்ந்த பழங்களை வைத்து சத்தான உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உலர்ந்த அத்திப்பழம் - 20
    உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை - தலா கால் கப்
    ரூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
    பேரீச்சம்பழம் - 15
    தேன் - சிறிதளவு.



    செய்முறை :

    உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் பேரீச்சம்பழம, அத்திப்பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். நைசாக அரைக்க கூடாது. ஒரு சுற்று சுற்றினால் போதுமானது.

    அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, தேன், ரூட்டி ஃப்ரூட்டி சேர்த்து  நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.

    அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.

    மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆரோக்கியமான நொறுக்குத்தீனி அனைத்து வயதினருக்கும் தேவை. என்னதான் ஆரோக்கியமானது என்றாலும், எப்போதுமே சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஆபத்துதான்.
    வீட்டிலேயே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம். சுண்டல், பொரிகடலை, அவல், சோளக்கருது, பொரி உருண்டை, வேர்க்கடலை, எள் உருண்டை, பயத்தம் உருண்டை, ரவா லட்டு போன்ற உணவுகளைத்தான் நொறுக்குத்தீனியாகச் சாப்பிட்டு வந்தனர் நம் முன்னோர்கள். ஆனால், இன்று பண்டிகை நாட்களில் மட்டுமே கடமைக்குச் செய்து சாப்பிடுகிறோம்.

    மேலும் கப்பை, மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. ஃப்ரூட்சாலட், வெஜ்சாலட், ஃப்ரெஷ் பழங்களில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இவை எல்லாம், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியவை. இதனால், ரத்தஅழுத்தம் மற்றும் உடல்எடை கட்டுப்படுகிறது.'

    'மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனி அனைத்து வயதினருக்கும் தேவை. ஆனால், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் தகுந்த ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் ஆரோக்கியமானது என்றாலும், எப்போதுமே சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஆபத்துதான். தேவையான நேரத்தில் மட்டுமே குறைந்த அளவு சாப்பிடலாம்.



    இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதது. எனவே, வாரத்துக்கு 2 நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலடுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர்திராட்சை மற்றும் பேரிச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம். மேலும், வெஜ் சான்ட்விச், எக் சான்ட்விச் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்த வரை அதிகம் வாங்கி ஃபிரிட்ஜில் அடைத்துவைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்வது சிறந்தது.

    பாட்டில் குளிர்பானங்களைவிட, இளநீர், மோர், கூழ் வகைகள், காய்கறி சூப்கள், அருகம்புல், வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் ஃப்ரெஷ் ஜூஸ் வகைகளைச் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாகச் செயல்பட முடியும்.'

    வீட்டில், நம் கையால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்து சாப்பிடும் திருப்தியும், சுவையும் வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுகளில் கிடைக்காது... இனி வீட்டிலேயே பண்ணலாமே!
    ×