search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Idli"

    • மாவை 8 மணி நேரத்துக்கு புளிக்க வைக்க வேண்டும்.
    • டம்ளர்களின் உள்பகுதி முழுவதும் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவ வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    இட்லி அரிசி - 4 டம்ளர்

    உளுந்து - 1 டம்ளர்

    வெந்தயம்-1 டீஸ்பூன்

    அவல்-1/2 டம்ளர்

    ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவையான அளவு

    செய்முறை:

    இட்லி அரிசியையும், அவலையும் நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி, தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த உளுந்து மற்றும் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அரிசி மற்றும் அவலை முதலில் இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு உளுந்தையும், வெந்தயத்தையும் அரைக்க வேண்டும். இப்போது இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

    இந்த கலவையை 8 மணி நேரத்துக்கு புளிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். சிறு சிறு டம்ளர்களின் உள்பகுதி முழுவதும் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவ வேண்டும். இட்லி மாவை டம்ளரின் முக்கால் அளவிற்கு மட்டும் ஊற்றி, நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருக வேண்டும். இவற்றை இட்லி வேகவைப்பது போல நீராவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். இது ஆறிய பிறகு டம்ளரில் இருந்து மெதுவாக வெளியே எடுக்கவும். இப்போது 'குல்பி இட்லி` தயார். சட்னி, குருமா அல்லது சாம்பார் ஆகியவற்றை சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி அழகான

    தட்டில் வைத்து சூடாக பரிமாறவும். இதேபோம்று மசாலா குல்பி இட்லி, காஞ்சீபுரம் குல்பி இட்லியும் விதவிதமாக தயார் செய்யலாம். நீங்களும் செய்து அசத்துங்கள்.

    • பெரும்பலானோர் வீட்டில் காலை உணவு இட்லியாக தான் இருக்கும்.
    • இன்று புதுவகையான இட்லியை செய்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - 2 கப்

    சர்க்கரை- 3 தேக்கரண்டி

    உளுந்தம் பருப்பு - 3/4 கப்

    தேங்காய் பால் - 3/4 கப்

    உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

    உலர் ஈஸ்ட் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    அரிசி மற்றும் உளுந்தப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 5 மணி நேரத்திற்கு ஊற வைத்து, அரசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதனுடன் அரைத்த 2 மாவையும் ஒன்றாக சேர்த்து கலந்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் உப்பு, 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து, மாவை தனியாக வைக்கவும்.

    சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து தனியாக வைக்கவும்.

    இந்தக் கலவையை மாவுடன் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    3 மணி நேரம் கழித்து மாவை வாழை இலைகளை கோன் போல் செய்து கொள்ளவும். செய்த கோனை டம்ளர்களில் வைக்கவும். அப்போது மாவு கீழே ஊற்றாது. அந்த கோனில் மாவை ஊற்றி வழக்கம் போல இட்லி சட்டியில் வைத்து மூடி 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.

    வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் கோன் இட்லி ரெடி.

    இதனுடன் சட்னி,சாம்பார், சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் போது இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1 கப்

    இட்லி அரிசி - 1 கப்

    உளுந்து - அரை கப்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    ஜவ்வரிசி - 5 டீஸ்பூன்

    உப்புபு - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும்.

    இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 7 மணிநேரம் புளிக்க விடவும்.

    தட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான தட்டு இட்லி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள காரசட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும்.
    • நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது.

    நீரிழிவு நோய் (Diabetes) என்பது உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி.

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது. உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும். ஒரு இட்லியில் கிட்டத்தட்ட 58 கலோரிகள் இருக்கிறது. இதில் மாவு சத்து (கார்போஹைட்ரேட்) அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிக அதிகமாக இருப்பதாலும், நார்ச்சத்து குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது. எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பதும், சுலபமாக ஜீரணமாகி விடுவதும் இதன் நன்மைகளாக கருதப்படுகிறது.

    அரிசி இட்லியை விட, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி போன்றவற்றில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லது. இட்லிக்கு தொட்டு சாப்பிடுவதற்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் நல்லது. அரிசி இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடலாம். ரவா இட்லி, ராகி இட்லி அல்லது ஓட்ஸ் இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று இட்லி சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    இட்லி - 5,

    கடலைமாவு - சிறிதளவு,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    சீரகம் - சிறிதளவு,

    மிளகாய்தூள் - சிறிதளவு,

    உப்பு - சுவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு,

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும்.

    இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான 'இட்லி 65' ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 8

    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    வேர்க்கடலை - சிறிதளவு

    முந்திரி - 10

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.

    உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த இட்லி உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
    • இன்று இந்த இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - ஒரு கிலோ

    உளுந்து - கால் கிலோ

    வெந்தயம் -

    இளநீர் - தேவையான அளவு

    உப்பு - சிறிதளவு.

    செய்முறை

    இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

    உளுந்தை தனியாக 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

    அரிசி, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

    அதேபோல் உளுந்து அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்து சேர்க்கவும்.

    அரைத்த இரண்டு மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இளநீரைச் சேர்த்து கரைத்து புளிக்க வைத்து விட்டு, பின்பு இட்லிகளைச் சுட்டெடுக்கவும்.

    சூப்பரான இளநீர் இட்லி தயார்!!!

    உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த இட்லி, வெயிலின் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.

    கவனத்தில் கொள்ள வேண்டியவை..

    இட்லி மாவு அரைக்கும் போது, மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போது தான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னை களைத் தவிர்க்க முடியும்.

    அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது.

    அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்து விடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில் தான் இருக்கு. புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - நான்கு கப்

    உளுந்து - முக்கால் கப் ,

    குடைமிளகாய் - 1,

    ப.மிளகாய் - 3

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பச்சைப் பட்டாணி - கால் கப்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - மூன்று ,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

    உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கி விட்டிருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.

    கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வெட்டி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டி யெடுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு மசாலா இட்லி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காலை அல்லது இரவு மீந்து போன இட்லி வைத்து இந்த ரெசிபியை செய்யலாம்.
    • 10 நிமிடத்தில் தயிர் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 6,

    புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,

    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,

    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,

    ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,

    மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

    உப்பு - தேவையான அளவு,

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    முந்திரிப்பருப்பு - 6.

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்,

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து தயிரில் கலக்கவும்.

    பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மாதுளம் முத்துக்கள், மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

    சூப்பரான தயிர் இட்லி ரெடி.

    அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

    இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது.
    • இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் நிறைந்துள்ளது.

    தென் இந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில் செரிமானம் ஆவதோடு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருப்பதால் தென்னிந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இட்லி பிரபலமாகிவிட்டது. உலக இட்லி தினம் கொண்டாடும் அளவுக்கு அதன் புகழ் உயர்ந்துவிட்டது. சமீபத்தில் உலக இட்லி தினம் (மார்ச் 30) கொண்டாடப்பட்ட நிலையில், இட்லி பற்றிய இனிமையாக தகவல்கள் பற்றி பார்ப்போம்.

    உடல் எடையை குறைக்கும்: இட்லியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. எனவே இது எடை இழப்புக்கு வித்திடும். மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். அதனால் பசி உணர்வு கட்டுக்குள் இருக்கும்.

    செரிமானத்தை எளிதாக்கும்: இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் நிறைந்துள்ளது. உளுந்தம் பருப்பு உடலுக்கு தேவையான இரும்பு சத்தை தக்க வைக்க உதவும். இவை செரிமானத்தை எளிதாக்கவும் வழிவகை செய்யும்.

    புரதச்சத்து கிடைக்கும்: இரண்டு வகையான புரதங்கள் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. முதல் வகை புரதம் விலங்கு இறைச்சிகளில் இருந்து கிடைக்கின்றன. அவை உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன. இரண்டாம் வகை புரதம் காய்கறிகள், பழங்கள் போன்ற தாவர வகைகளில் இருந்து பெறப்படுகின்றன. அவற்றுள் சில அமினோ அமிலங்கள் இல்லாதிருக்கும். தானியங்கள் மற்றும் பருப்புகளில் சில அமினோ அமிலங்கள் இல்லாததால் அவை இரண்டாம் வகை புரதமாக கருதப்படுகின்றன. ஆனால் இட்லியில் இந்த இரு கலவைகளும் சேர்க்கப்படும்போது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் கிடைக்கும்.

    குடல் ஆரோக்கியத்தை காக்கும்: இட்லி மாவு புளிக்கவைக்கப்படும்போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகின்றன. இவை குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. செரிமானத்தை மேம்படுத்துவது முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.

    இட்லியை வண்ணமயமான உணவாகவும், நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு நிறைய காய்கறிகளுடன் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம். சட்னிக்கு பதிலாக காய்கறிகள் அதிகம் கலந்த சாம்பார் தயாரித்து சாப்பிடுவது சிறப்பானது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • விரைவில் டிபன் செய்ய நினைப்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • காலையில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 250 கிராம்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 300 மில்லி

    சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி

    கேரட் - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

    நெய் - ஒரு குழி கரண்டி

    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

    கடுகு - ஒரு டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    முந்திரிப் பருப்பு - 15

    பெருங்காயம் - சிட்டிகை

    மஞ்சள் பொடி - சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், கொத்தமல்லித்தழையை சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.

    இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சேமியா இட்லி தயார்.

    இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அருமையான காம்பினேஷன்.

    • பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
    • உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 3

    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

    துருவிய கேரட் - 1/4 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - 1 துண்டு

    உப்பு - தேவையான அளவு

    Eno - 1 தேக்கரண்டி

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துக் வதக்கவும்.

    அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் ஒரு தேக்கரண்டி Eno மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

    மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    இப்போது சுவையான பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி தயார்.

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

    ×