என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை கேழ்வரகு அடை
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை கேழ்வரகு அடை

    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் கேழ்வரகு, கோதுமையை சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்று இந்த இரண்டு மாவையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 3,
    பச்சை மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை கேழ்வரகு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×