என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை பஜ்ஜி"

    • வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
    • அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    பெரிய வெங்காயம் - 3

    கடலை மாவு - 1/4 கப்

    அரிசி மாவு - 3 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/4 ஸ்பூன்

    மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்

    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது

    கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது

    உப்பு - தேவையான அளவு

    ஆப்ப சோடா - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து பிசையவும்.

    வெங்காயத்தில் இருந்து தண்ணீர் வரும். மாவிற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும். (அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்)

    சிறிது தளர்வாக மாவை பிசைந்து மாவின் நடுவில் பாதியாக வெட்டிய முட்டையை வைத்து உருண்டையாக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் சூடானதும் மசாலா முட்டையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை பஜ்ஜி தயார்.

    • திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.
    • சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், கோவிந்தஹள்ளியைச் சேர்ந்தவர் திருப்பதய்யா (வயது 39).

    இவர் முட்டை பஜ்ஜியை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி சுவர்ணா கடையில் முட்டை பஜ்ஜி வாங்கி வந்தார்.

    அதை திருப்பதய்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.

    பின்னர் அதை வெளியே எடுக்க முயன்றார். வெளியே வராததால் திருப்பதய்யா மூச்சு திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுவர்ணா தொண்டையில் சிக்கிய பஜ்ஜியை எடுக்க முயன்றும் முடியவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திருப்ப தய்யாவின் தொண்டையில் சிக்கியிருந்த முட்டை பஜ்ஜியை சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இருப்பினும் மூச்சு விட முடியாமல் திருப்பதய்யா இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×