என் மலர்tooltip icon

    சமையல்

    எலுமிச்சைப் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க... இப்படி செய்யலாமே...
    X

    எலுமிச்சைப் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க... இப்படி செய்யலாமே...

    • பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
    • எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான்.

    சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    * குருமா, சட்னி போன்றவற்றிற்கு அவசரமாக அரைக்கும் நேரத்தில் ஜார் சூடாகி விடும். இதைத் தவிர்க்க ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம்.

    * ஜாம், ஊறுகாய் பாட்டில்களின் மூடியைத் திறக்க கஷ்டமாக இருந்தால், கையில் கிளவுஸ் அணிந்து கொண்டால் எளிதாக திறந்து விடலாம்.

    * பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.

    * தேங்காய்க்கு பதில், வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும். இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தும் கிடைக்கும்.

    * சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும். இதைத் தவிர்க்க வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது மஞ்சள் தூள் போட்டு பிறகு கடுகு தாளித்தால் வெடித்துச் சிதறாது.

    * ஊறுகாய்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை தயார் செய்து பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் குறைந்த அளவு உப்பு சேர்த்தாலே போதும்.

    * எலுமிச்சைப் பழங்கள் அதிகமாக இருந்தால், ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியாக டிஷ்யூ பேப்பரால் சுற்றி, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    * கரைத்த பஜ்ஜிமாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் பஜ்ஜியின் சுவையே அலாதி தான்.

    * பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு, சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால் சாம்பாரின் சுவை கூடும்.

    * கடலைப்பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையைச்சேர்த்தால் போளி நிறமாகவும், சுவையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.

    * இன்ஸ்டன்ட் மாவில் குலோப் ஜாமூன் செய்யப்போறீங்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் ஜாமூன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான். ரவையை மாவாகத் திரித்து, அதில் வெல்லப்பாகு விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து பிடித்து வேகவைத்தால் வித்தியாசமான, சுவையான கொழுக்கட்டை ரெடி.

    * ரவா லட்டு செய்யும்போது அத்துடன் மிக்சியில் அவலையும் ரவைபோல் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து, மூன்று டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து சுவையான ரவா லட்டு பிடிக்கலாம்.

    * அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து, சர்க்கரைப் பொங்கல் செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும் இருக்கும்.

    * இனிப்பு பணியாரம் மிருதுவாக இருக்க, அரிசி மாவை ஒரு துணியில் கட்டி, இட்லிப்பாத்திரத்தில் வைத்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்து, நன்றாக அவித்த பிறகு பணியாரம் செய்தால் பஞ்சுபோல இருக்கும்.

    * ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவைப் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * பாயசம் செய்யும்போது, ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பின் நெய் சேர்த்து வறுத்தால் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    * தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வேக விட்டு கூழாக மசிக்கவும். பிறகு கடாயில் நெய் விட்டு சர்க்கரை மசித்த கலவையை சேர்த்து, கிளறினால் சுவையான அல்வா தயார்.

    * எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்தும் ரசம் வைக்கலாம். வாய்க்கசப்பும் நீங்கி விடும்.

    Next Story
    ×