என் மலர்
நீங்கள் தேடியது "Milk Sweet"
- பன்னீரை கடையில் வாங்காமல், வீட்டில் நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
- 1947-ல் பாபா தாக்கூர் தாஸ் என்பவரால் கலாகண்ட் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்!
தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமூன், லட்டு என எண்ணெய் பலகாரங்கள் நிறைய செய்திருப்போம், சாப்பிடிருப்போம். ஆனால் பலரும் இந்தியாவின் பிரபலமான இந்த இனிப்பை மறந்திருப்போம். அப்படி தீபாவளிக்கு கலாகண்ட் செய்ய மறந்தவர்களுக்கான பதிவுதான் இது. சுவையான கலாகண்ட் செய்வது எப்படி என பார்ப்போம். கலாகண்ட் செய்வதற்கு பால், பன்னீர், நெய், சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்டவை அவசியம். இதில் பன்னீரை கடையில் வாங்கமல், வீட்டில் இருக்கும் பாலை வைத்து நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
தேவையான பொருட்கள்...
பால் - 1 லிட்டர்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
குங்குமப்பூ - (வேண்டுமென்றால்)
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிஸ்தா - (வேண்டுமென்றால்)
பாதாம் - (வேண்டுமென்றால்)
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்

ருசிக்க தயாராக கலாகண்ட் இனிப்பு
செய்முறை
முதலில் பன்னீர் செய்வது எப்படி என பார்ப்போம். பன்னீர் செய்வதற்கு 500மிலி பால் எடுத்துக்கொள்வோம். பாலை நன்கு காய்ச்சவேண்டும். பால் நன்கு கொதித்தபின்பு, அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து விடவேண்டும். பால் முழுவதுமாக திரிந்து வரும்வரையில் அடுப்பை நிறுத்தவேண்டாம். பின்னர் தண்ணீர் தனியாக பிரிந்த உடன், அதனை எடுத்து வடிகட்டி கொள்ளலாம். பின்னர் பன்னீர் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அப்போதுதான் பன்னீரில் எலுமிச்சைப் பழத்தின் புளிப்பு தெரியாது.
பின்னர் ஒரு லிட்டர் பால் எடுத்துக்கொண்டு, அதனை நன்கு கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும்போது கிண்டிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பாத்திரத்தில் அடிபிடிக்காது. பால் நன்கு வற்றி, க்ரீம் பதத்திற்கு வரும்வரை கிண்டவேண்டும். இந்தப்பதம் வரும்போதே பாலில், செய்துவைத்த பன்னீரை எடுத்துக்கொட்டி கிண்டுங்கள். தொடர்ந்து கிண்டியபிறகு பாலில் உள்ள ஈரம் வற்றியபிறகு, அதில் அரை கப் நெய் ஊற்றவேண்டும். நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிண்டியபின், 1 கப் வெள்ளை சர்க்கரையை சேர்க்கவேண்டும். இனிப்பு கூடுதலாக வேண்டுமென்றால், கூடுதல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
கடைசியில் ஏலக்காய்தூள் போட்டு கிண்டவேண்டும். பின்னர் கலாகண்ட் நன்கு கெட்டி பதத்திற்கு வந்தபின் இறக்கிக்கொள்ளலாம். நன்கு நிறம்வேண்டும் என்பவர்கள் கூடுதல் நேரம்வைத்து கிண்டலாம். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்தடவி, கலாகண்ட் கலவை சூடாக இருக்கும்போதே அதனை கொட்டி அழுத்திவிடவேண்டும். வேண்டுமானால் அதன்மேல் முந்திரி, பாதாம், என உங்களுக்கு பிடித்த பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இரண்டுமணிநேரம் கழித்து கலாகண்ட் கலவையை எடுத்துப்பார்த்தால் நன்கு ஆறி, கெட்டியாக இருக்கும். அருமையான கலாகண்ட் இனிப்பு தயார்.
- கொஞ்சம் கூட பால் சேர்க்காமல் பால்கோவா.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
கலாகந்த் சுவீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்துவதற்கு இது ஒரு அற்புதமான இனிப்பாக இருக்கும்.
கொஞ்சம் கூட பால் சேர்க்காமல் பால்கோவா செய்தால் எப்படி இருக்கும். என்ன மேஜிக் மாதிரி தோணுதா, ராஜஸ்தானில் ஃபேமசான கலாகந்த் ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்:
பனீர்- 2 கப்
கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்
பால் பவுடர்- 3 ஸ்பூன்
பாதாம் பருப்பு- 6 ( நறுக்கியது)
நெய்- தேவையான அளவு
ஏலக்காய் தூள்- சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பால் பவுடர் சேர்க்க வேண்டும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்க வேண்டும். இதனை கட்டி இல்லாமல் நன்றாக கலந்துவிட வேண்டும். அதன்பிறகு அதில் பனீர் துண்டுகளை கையால் மசித்து இதில் சேர்க்க வேண்டும். துருவ வேண்டாம். கையால் பிசைந்து சேர்த்தால் போதுமானது.(குறிப்பு மிதமான தீயில் வைத்து சமைக்க வேண்டும்.)
பின்னர் இதில் ஏலக்காய் பொடி மற்றும் நெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை சிறிது இறுகி வரும்போது பாதம் துண்டுகளை கலந்து இறக்கலாம். இந்த கலவையை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒருமணிநேரம் வைத்திருந்து எடுத்தால் சூப்பரான ராஜஸ்தான் ஸ்பெஷல் கலாகந்த் ரெடி.






