என் மலர்
நீங்கள் தேடியது "Cook"
- சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு போட்டு ஆரோக்கியமான பாயாசம் செய்யலாம்!
- பால், நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கும்.
நம்ம ஊர் திருவிழாக்களிலும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஓர் இனிப்பு பலகாரம் என்றால் அது பாயாசம் தான். அதிலும், பால் பாயாசத்தின் தனித்துவமான சுவையும், கிரீமிப் பதமும் யாருக்குத்தான் பிடிக்காது? சமைப்பதற்கு எளிதான அதேவேளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் இந்த பால் பாயாசத்தை, பாரம்பரிய முறையிலும் ஆரோக்கியமான மாற்றுகளுடனும் தயாரிக்கும் செய்முறையை சமையல் கலைஞர் வனிதா நமக்காக செய்து காட்டியுள்ளார். பொதுவாக, பாயாசம் என்றால் அதில் சர்க்கரையின் பங்கு அதிகம் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்கப் போகும் செய்முறையில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, ஆரோக்கியம் நிறைந்த பனங்கற்கண்டு சேர்த்து, கூடுதல் நன்மையுடன் சுவையான பால் பாயாசம் எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கிரீமி பால் பாயாசம் செய்முறை
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 கப் கொழுப்புடன் கூடிய பாலைச் சேர்க்கவும்.
* பால் ஊற்றியவுடன் லேசாக ஒருமுறை மட்டும் கிண்டி விடவும். இது அடி பிடிக்காமல் இருக்க உதவும். அதேவேளை பாலில் ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதுவே பாயாசத்துக்குக் கெட்டியான, கிரீமி சுவையைக் கொடுக்கும்.
* பால் கொதித்து நுரைத்து பொங்கும் தருவாயில், சுவையைச் சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.
* பால் கொதித்துக் கொண்டு இருக்கும்போது, 4 ஸ்பூன் பால் பவுடருடன் கொஞ்சம் பாலைக் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
* பிறகு வறுத்து வைத்திருக்கும் 4 ஸ்பூன் சேமியாவைக் கொதிக்கும் பாலில் சேர்க்கவும். சேமியா சேர்த்த உடனேயே, 1 ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். இது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், கட்டி முட்டியாகாமல் இருக்க உதவும்.
* இந்த நேரம் கரைத்து வைத்த பால் பவுடர் கலவையையும், 1 ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கையும் (மில்க் மேட்) பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
* இப்போது பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். இந்த பாயாசத்திற்கு நட்ஸ்களை வறுக்கத் தேவையில்லை.
* கலவை கொதி வந்த பிறகு, அடுப்பைச் சிம்மில் வைத்து, குறைந்தது 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அப்போதுதான் சேமியா முழுமையாக வெந்து பால் பவுடர், கண்டென்ஸ் மில்க் ஆகியவை நன்கு கிரீமியாக மாறும்.
* சேமியா நன்றாக வெந்து, பால் திக்கான பிறகு, பொடித்து சலித்து வைத்த 4 ஸ்பூன் பனங்கற்கண்டு தூளைச் சேர்க்கவும். (சேமியா வேகும் முன் சர்க்கரை சேர்த்தால், சேமியா வேகாமல் போக வாய்ப்புள்ளது)
* பனங்கற்கண்டு சேர்த்த பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். பின் இனிப்பு நன்கு கரைந்து, பாயாசம் இன்னும் 10 நிமிடங்கள் கொதித்து கிரீமியாக, திக்கான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இப்போது கிரீமியான, சுவையான பால் பாயாசம் தயார்!

பரிமாற தயார் நிலையில் கிரீமி பால் பாயாசம்
பால் பாயாசத்தின் நன்மைகள்
* இந்தப் பால் பாயாசத்தில் ஆரோக்கியமான பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரையை விட சிறந்த ஆரோக்கிய மாற்று. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* பால் மற்றும் நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கின்றன.
* இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். விசேஷ நாட்களில் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
* இனிப்புச் சுவை இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரக்கூடியது.
இந்த கிரமி பால் பாயாசம், சுவைக்காக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான நன்மைகளையும் கொண்டுள்ளதால், இந்த இனிய உணவைத் தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்ல விருந்தினர்களையும் அசத்துங்கள்!
- சரவணன் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
- கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.
திருச்செந்தூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பாக்கிய ரதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் கடந்த மூன்று மாதங்களாக திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
இதே கோவிலில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மேட்டூரை சேர்ந்த சுரேஷ்(45) ஓராண்டாக சமையல் வேலை செய்து வருவதாகவும், இவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவில் நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேஷை (56) புசாரி சரவணனுக்கு உதவியாக இருந்து வேலை செய்ய வேலைக்கு சேர்த்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், வெங்கடேசிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கோவில் வளாகத்தில் வெங்கடேஷ் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ் மீண்டும் வெங்கடேசிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
படுகாயம் அடைந்த வெங்கடேஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
- கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அல்லாசாமி கோவில் தெரு வைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). சமையல்காரர். இவர் நேற்று இரவு வீட்டின் மாடியில் நடந்து கொண்டி ருந்தார். திடீரென நிலை தடுமாறிய பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பாஸ்கரை மீட்ட அவரது குடும்பத்தார், 108 ஆம்பு லன்ஸ் மூலம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுப்பிரமணியன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- இன்று காலை சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 35). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இவர் நேற்று வீரவ நல்லூர் அருகே கன்னடியன் கால்வாயில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவரது சைக்கிள் மற்றும் ஆடைகள் மட்டும் இருந்தன.
இதனால் அவர் கால்வாயில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீரவநல்லூர் போலீசார் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இந்நிலையில் இன்று காலை கொட்டாக்குறிச்சி பகுதியில் சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கன்னடியன் கால்வாயிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டது. அதில் குளிக்க சென்ற சுப்பிரமணியன் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.
- பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
- அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார். பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.
பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43), சமையல் தொழிலாளி. இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள தெப்பக்குளம் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் முருகனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
சம்பவ இடத்துக்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முருகன் மீது எதிர் தரப்பினர் ஆத்திரத்தில் இருந்ததும் தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் சில வீடுகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் நடமாட்டம் பற்றிய காட்சிகள் எதுவும் இல்லை. சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை தெரிந்து அதில் தங்களது உருவம் பதிவாகாமல் இருக்கும் வகையில் மர்ம நபர்கள் வயல் வெளிகள் வழியாக வந்து பதுங்கி இருந்திருக்கலாம் எனவும், முருகன் சம்பவ இடத்துக்கு வரும் போது அவரை திட்டமிட்டபடி கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசா ரணையை முடுக்கவிட்டுள்ளனர்.
இதற்கிடையே முருகனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று 4 வாகனங்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொக்கிரகுளம்- மேலப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்ட முருகனின் உறவினர்கள் கூறியதாவது:- கூலிப்படைைய ஏவி முருகன் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொலை நடந்து இன்றோடு 2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் முருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை முருகன் உடலை வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார்.
- மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கடலூர்:
கொல்கத்தா மாநிலம் புருளியாவை சேர்ந்தவர் பாபுநாத் சுரேன் (வயது 26). இவர் ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையம் தனியார் கம்பெனியில் சமையல் காரராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் பாபுநாத் சுரேனை மீட்டு பெரிய காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பாபுநாத் சுரேனை சோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குக் அறிமுகமான ஓராண்டிற்குப் பிறகு அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். குக் 161 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிராட் 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். 123 போட்டிகளிலும் குக் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அலஸ்டைர் குக் அடித்த சதத்திலேயே இந்தியாவிற்கு எதிராக 294 ரன்கள் அடித்ததுடன் எனக்கு மிகவும் பிடித்தமான ஆட்டம் என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘எனக்கு மிகவும் பிடித்தமான சதம் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவிற்கு எதிராக 2011-ல் அடித்த 294 ரன்களாகும். ஏனென்றால், அவரது சதம் எங்களுடைய பந்து வீச்சாளர்களுக்கு இரண்டரை நாட்கள் ஓய்வை கொடுத்தது.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் ஓவலில் நடைபெற்ற போட்டியில் அவர் பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்து பார்த்தேன்’’ என்றார்.
அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.

ஜென்னிங்ஸ்
அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

ஜோ ரூட்
முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.






