search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cook"

    • பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
    • அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.

    பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார்.  பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.

    பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • சுப்பிரமணியன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இன்று காலை சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    நெல்லை:

    வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 35). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

    இவர் நேற்று வீரவ நல்லூர் அருகே கன்னடியன் கால்வாயில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவரது சைக்கிள் மற்றும் ஆடைகள் மட்டும் இருந்தன.

    இதனால் அவர் கால்வாயில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீரவநல்லூர் போலீசார் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இந்நிலையில் இன்று காலை கொட்டாக்குறிச்சி பகுதியில் சுப்பிரமணியன் கால்வாயில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கன்னடியன் கால்வாயிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டது. அதில் குளிக்க சென்ற சுப்பிரமணியன் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

    • பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அல்லாசாமி கோவில் தெரு வைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). சமையல்காரர். இவர் நேற்று இரவு வீட்டின் மாடியில் நடந்து கொண்டி ருந்தார். திடீரென நிலை தடுமாறிய பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பாஸ்கரை மீட்ட அவரது குடும்பத்தார், 108 ஆம்பு லன்ஸ் மூலம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
    • கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரவணன் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
    • கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.

    திருச்செந்தூர்:

    திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பாக்கிய ரதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் கடந்த மூன்று மாதங்களாக திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.

    இதே கோவிலில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மேட்டூரை சேர்ந்த சுரேஷ்(45) ஓராண்டாக சமையல் வேலை செய்து வருவதாகவும், இவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவில் நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேஷை (56) புசாரி சரவணனுக்கு உதவியாக இருந்து வேலை செய்ய வேலைக்கு சேர்த்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், வெங்கடேசிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கோவில் வளாகத்தில் வெங்கடேஷ் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ் மீண்டும் வெங்கடேசிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந்த வெங்கடேஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கொல்கத்தா மாநிலம் புருளியாவை சேர்ந்தவர் பாபுநாத் சுரேன் (வயது 26). இவர் ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையம் தனியார் கம்பெனியில் சமையல் காரராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் பாபுநாத் சுரேனை மீட்டு பெரிய காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்‌. பின்னர் மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பாபுநாத் சுரேனை சோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காட்டில் கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளியின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43), சமையல் தொழிலாளி. இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள தெப்பக்குளம் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் முருகனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    சம்பவ இடத்துக்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக முருகன் மீது எதிர் தரப்பினர் ஆத்திரத்தில் இருந்ததும் தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் சில வீடுகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் நடமாட்டம் பற்றிய காட்சிகள் எதுவும் இல்லை. சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை தெரிந்து அதில் தங்களது உருவம் பதிவாகாமல் இருக்கும் வகையில் மர்ம நபர்கள் வயல் வெளிகள் வழியாக வந்து பதுங்கி இருந்திருக்கலாம் எனவும், முருகன் சம்பவ இடத்துக்கு வரும் போது அவரை திட்டமிட்டபடி கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசா ரணையை முடுக்கவிட்டுள்ளனர்.

    இதற்கிடையே முருகனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று 4 வாகனங்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொக்கிரகுளம்- மேலப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்ட முருகனின் உறவினர்கள் கூறியதாவது:- கூலிப்படைைய ஏவி முருகன் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    கொலை நடந்து இன்றோடு 2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் முருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை முருகன் உடலை வாங்க மாட்டோம்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest
    ஓவல்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

    5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.

    சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 
    இந்தியாவிற்கு எதிராக அலஸ்டைர் குக் 294 ரன்கள் அடித்ததே எனக்கு மிகவும் பிடித்தமான இன்னிங்ஸ் என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் ஓவல் டெஸ்டோடு ஓய்வு பெற இருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்த குக், 12 வருட ஆட்டத்திற்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்.

    குக் அறிமுகமான ஓராண்டிற்குப் பிறகு அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். குக் 161 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிராட் 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். 123 போட்டிகளிலும் குக் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

    அலஸ்டைர் குக் அடித்த சதத்திலேயே இந்தியாவிற்கு எதிராக 294 ரன்கள் அடித்ததுடன் எனக்கு மிகவும் பிடித்தமான ஆட்டம் என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘எனக்கு மிகவும் பிடித்தமான சதம் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவிற்கு எதிராக 2011-ல் அடித்த 294 ரன்களாகும். ஏனென்றால், அவரது சதம் எங்களுடைய பந்து வீச்சாளர்களுக்கு இரண்டரை நாட்கள் ஓய்வை கொடுத்தது.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் ஓவலில் நடைபெற்ற போட்டியில் அவர் பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்து பார்த்தேன்’’ என்றார்.
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சங்ககாரா 12,400 ரன்னுடன் அதிக ரன் எடுத்த வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார். அவரை குக் சமன் செய்வதற்கு இன்னும் 71 ரன்கள் தேவைப்படுகிறது. #ENGvIND

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரராக குக் உள்ளார். ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவிற்கு எதிரான 5-வது டெஸ்ட் அவருக்கு கடைசி போட்டியாகும்.

    குக் சிறப்பாக ஆடி 71 ரன் எடுத்தார். அவர் 161 டெஸ்டில் 12,325 ரன் எடுத்துள்ளார். அவர் தனது கடைசி இன்னிங்சில் 75 ரன் எடுத்தால் சங்ககராவை சமன் செய்வார்.

    சங்ககாரா 12,400 ரன்னுடன் அதிக ரன் எடுத்த வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார். அவரை குக் முந்துவாரா என்பது கடைசி இன்னிங்சில் தெரியவரும். #ENGvIND
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்துள்ளது. #ENGvIND #1000thTest
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார்.

    அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.


    ஜென்னிங்ஸ்

    அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.


    ஜோ ரூட்

    முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×