search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "england team"

    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
    • விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

    2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

    முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். சொல்லப்போனால் தன்னுடைய 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முழுமையான தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகியது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களே அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.

    இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.

    அதில், "விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது.மார்க்வுட் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். டாம் ஹார்ட்லீ, ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீசக்கூடியவர் என்றாலும் அவர் கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருகிறார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களம் காணுவது அபூர்வ நிகழ்வாகும். இதற்கு முன்பு 1888-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மட்டும் இவ்வாறு ஒரே வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தது.

    தனிப்பட்ட விஷயம் காரணமாக இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரில் ஒருவர் கூட இல்லாமல் இந்தியா டெஸ்ட் ஆடுவது 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

    • ஜனவரி 25-ந்தேதியில் இருந்து மார்ச் 11-ந்தேதி வரை இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியும் (முதல் இரண்டு போட்டி), இங்கிலாந்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது. ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து அணி எந்தவிதமான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருக்கிறது.

    2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ந்தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ந்தேதியும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவிலும் தொடங்குகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஹாரி ப்ரூக் கடைசி நேரத்தில் இந்திய தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலான லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • குரூப் 12 சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.

    டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றது. கத்துக்குட்டி அணிகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை? என்பது கடைசி லீக் ஆட்டம் வரை பரபரப்பாகவே சென்றது.

    ஒன்றிரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. குறிப்பாக குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற கடும் போட்டி நிலவியது.

    முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியது, ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள் போட்டி நிலவியது.

    மேலும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்ததால் சற்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    குரூப் 1-ன் கடைசி லீக்கில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலேக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடிக்க 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பட்லர் மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்தது, பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், ஹேல்ஸ 47 பந்தில் 86 ரன்களும் சேர்த்தனர்.

    நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பட்லர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 137 ரன்களே அடித்தது. பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 19 ஓவரில் இலக்கை எட்டி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

    கடைசி மூன்று வாழ்வா? சாவா? ஆட்டங்களில் ஆசிய அணிகள் துவம்சம் செய்து இங்கிலாந்து கம்பீரமாக கோப்பையை வென்று சொந்த நாடு திரும்பியுள்ளது.

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

    லண்டன்:

    உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டனும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

    கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணி இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ளது. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒரு நாள் போட்டி அணியாகும். என்னை பொறுத்தமட்டில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அவர்கள் இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள். இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நான் முதல்முறையாக சொல்லுகிறேன். அந்த அணியின் நடப்பு பார்மும், ஆட்டமும் என்னை அதிகம் ஈர்த்து இருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அதிக ரன்களை குவித்து வருகிறது.

    இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் கடைசி கட்டம் வரை நன்றாக ஆடுகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் 50 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் அந்த அணிகளின் ஆட்டத்தில் 20 ஓவர் ஆட்டத்தின் அதிரடி தாக்கம் அதிகம் இருக்கும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானதாகும்.

    இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் நன்றாக செயல்படும் என்று நம்புகிறேன். தென்ஆப்பிரிக்காவும் நல்ல அணியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணியை கருப்பு குதிரை எனலாம். அந்த அணி நன்றாகவும் விளையாடும். மோசமாக செயல்படவும் வாய்ப்பு உண்டு. வெஸ்ட்இண்டீசும், பாகிஸ்தான் அணியும் ஒரே மாதிரி குணம் கொண்டவையாகும். இந்த உலக கோப்பை போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். இங்கிலாந்து, இந்தியா அணிகளை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடினமானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கையில் அந்த அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தற்போது அந்த அணியினர் தங்களுக்கு சாதகம் இல்லாத ஆடுகளங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு மெக்ராத் கூறினார்.
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சங்ககாரா 12,400 ரன்னுடன் அதிக ரன் எடுத்த வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார். அவரை குக் சமன் செய்வதற்கு இன்னும் 71 ரன்கள் தேவைப்படுகிறது. #ENGvIND

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரராக குக் உள்ளார். ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவிற்கு எதிரான 5-வது டெஸ்ட் அவருக்கு கடைசி போட்டியாகும்.

    குக் சிறப்பாக ஆடி 71 ரன் எடுத்தார். அவர் 161 டெஸ்டில் 12,325 ரன் எடுத்துள்ளார். அவர் தனது கடைசி இன்னிங்சில் 75 ரன் எடுத்தால் சங்ககராவை சமன் செய்வார்.

    சங்ககாரா 12,400 ரன்னுடன் அதிக ரன் எடுத்த வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார். அவரை குக் முந்துவாரா என்பது கடைசி இன்னிங்சில் தெரியவரும். #ENGvIND
    இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 198 ரன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று ஜடேஜா கூறியுள்ளார். #ENGvIND

    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான குக்குக்கு அனைத்து வீரர்களும் மரியாதை செய்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து இருந்தது. குக் 71 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர். பட்லர் 11 ரன்னும், ஆதில் ரஷீத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், பும்ரா, ரவிந்திரஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 48 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.

    நேற்றைய ஆட்டம் குறித்து ஜடேஜா கூறியதாவது:-

     



    எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குக்கும், மொய்ன்அலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது எங்களது திட்டமாக இருந்தது. 2-வது செசனில் நாங்கள் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. ஆனால் ரன்களையும் வாரி கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

    ஆடுகளம் சமமான நிலையில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தில் லேசான மாற்றம் இருந்தது. இதை பயன்படுத்தி வேகப்பந்து வீர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3 வேகப்பந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசினார்கள்.

    பந்துவீச்சில் என்னால் நேர்த்தியாக செயல்பட முடிந்தது. இதேபோல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 4 டெஸ்டிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வின் காயம் அடைந்ததால் 5-வது டெஸ்டில் வாய்ப்பை பெற்றார். அவர் ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதற்கிடையே இந்த டெஸ்டில் கருண்நாயரை சேர்க்காதது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா, பத்ரிநாத், வர்ணனையாளர் ஹர்ஷா போகலே உள்ளிட் டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக கருண்நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. #ENGvIND

    ×