என் மலர்
நீங்கள் தேடியது "England Team"
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டுவிஸ்ட் வைக்கும் விதமாக 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 12 பேர் கொண்ட அணியில் எந்த வீரர் லெவனில் இடம் பெற மாட்டார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. அதற்கான தேர்வை ரசிகர்களிடமும் ஆஸ்திரேலிய அணியிடமும் இங்கிலாந்து அணி விட்டுவிட்டது போல இந்த அணி விவரத்தை அறிவித்துள்ளது.
இறுதி லெவனில் ஆடுகள நிலைமைகளைப் பொறுத்து அனைத்தும் வேகப்பந்து வீச்சு அட்டாக் அல்லது சுழற்பந்து வீச்சாளார் பஷீர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
- இந்த அணியில் காயம் காரணமாக கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கவில்லை.
- கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தெல் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது வரும் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் வய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தாலைமையிலான இந்த அணியில் காயம் காரணமாக கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தெல் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலந்து அணி (முதல் டெஸ்ட்):-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
- குரூப் 12 சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.
டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றது. கத்துக்குட்டி அணிகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை? என்பது கடைசி லீக் ஆட்டம் வரை பரபரப்பாகவே சென்றது.
ஒன்றிரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. குறிப்பாக குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற கடும் போட்டி நிலவியது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியது, ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள் போட்டி நிலவியது.
மேலும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்ததால் சற்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
குரூப் 1-ன் கடைசி லீக்கில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலேக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடிக்க 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பட்லர் மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்தது, பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், ஹேல்ஸ 47 பந்தில் 86 ரன்களும் சேர்த்தனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பட்லர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 137 ரன்களே அடித்தது. பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 19 ஓவரில் இலக்கை எட்டி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
கடைசி மூன்று வாழ்வா? சாவா? ஆட்டங்களில் ஆசிய அணிகள் துவம்சம் செய்து இங்கிலாந்து கம்பீரமாக கோப்பையை வென்று சொந்த நாடு திரும்பியுள்ளது.
- ஜனவரி 25-ந்தேதியில் இருந்து மார்ச் 11-ந்தேதி வரை இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியும் (முதல் இரண்டு போட்டி), இங்கிலாந்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது. ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணி எந்தவிதமான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருக்கிறது.
2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ந்தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ந்தேதியும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவிலும் தொடங்குகிறது.
#WATCH | Telangana: England cricket team players arrived at Rajiv Gandhi International Airport, Hyderabad, for the 5-match Test series. The first Test is scheduled to be played from January 25 at the Rajiv Gandhi International Stadium. (21.01) pic.twitter.com/y7YDnzjtQw
— ANI (@ANI) January 21, 2024
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஹாரி ப்ரூக் கடைசி நேரத்தில் இந்திய தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலான லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது.மார்க்வுட் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். டாம் ஹார்ட்லீ, ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீசக்கூடியவர் என்றாலும் அவர் கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருகிறார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களம் காணுவது அபூர்வ நிகழ்வாகும். இதற்கு முன்பு 1888-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மட்டும் இவ்வாறு ஒரே வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தது.
தனிப்பட்ட விஷயம் காரணமாக இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரில் ஒருவர் கூட இல்லாமல் இந்தியா டெஸ்ட் ஆடுவது 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
- 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
- விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். சொல்லப்போனால் தன்னுடைய 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முழுமையான தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகியது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களே அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.
இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.
அதில், "விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்துள்ளது.
- 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.
வெலிங்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 125 ரன்களில் சுருண்டது.
இதனையடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கெட் 92 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்த ஒரே அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 லட்சத்து 29 ரன்களை எடுத்துள்ளது. 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:-
5,00,126 - இங்கிலாந்து (1082 போட்டிகள், 18,954 இன்னிங்ஸ்)
4,29,000 - ஆஸ்திரேலியா (868 போட்டிகள், 15,183 இன்னிங்ஸ்)
2,78,751 - இந்தியா (586 போட்டிகள், 10,119 இன்னிங்ஸ்)
- நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டி20 தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம்.
இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் ஏதுமின்றி அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன்:-
பில்சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஒவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், பிரைடன் கார்ஸ்.
லண்டன்:
உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-
உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.
கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து அணி இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ளது. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

லண்டன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான குக்குக்கு அனைத்து வீரர்களும் மரியாதை செய்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து இருந்தது. குக் 71 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர். பட்லர் 11 ரன்னும், ஆதில் ரஷீத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், பும்ரா, ரவிந்திரஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 48 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.
நேற்றைய ஆட்டம் குறித்து ஜடேஜா கூறியதாவது:-

எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குக்கும், மொய்ன்அலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது எங்களது திட்டமாக இருந்தது. 2-வது செசனில் நாங்கள் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. ஆனால் ரன்களையும் வாரி கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆடுகளம் சமமான நிலையில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தில் லேசான மாற்றம் இருந்தது. இதை பயன்படுத்தி வேகப்பந்து வீர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3 வேகப்பந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசினார்கள்.
பந்துவீச்சில் என்னால் நேர்த்தியாக செயல்பட முடிந்தது. இதேபோல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 4 டெஸ்டிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வின் காயம் அடைந்ததால் 5-வது டெஸ்டில் வாய்ப்பை பெற்றார். அவர் ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.
இதற்கிடையே இந்த டெஸ்டில் கருண்நாயரை சேர்க்காதது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா, பத்ரிநாத், வர்ணனையாளர் ஹர்ஷா போகலே உள்ளிட் டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக கருண்நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. #ENGvIND






